யாழில் மின்னல் தாக்கி பெண்கள் உட்பட மூவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் மின்னல் தாக்கி இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் தோட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்த இரு பெண்கள் உட்பட மூவர், அதிக மழை காரணமாக தென்னைமரத்தடியில் உள்ள கொட்டிலில் தஞ்சம் புகுந்த வேளையே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் திருநாவுக்கரசு கண்ணன் (48 வயது), கந்தசாமி மைனாவதி (52 வயது), ரவிக்குமார் சுதா (38 வயது) ஆகிய மூவருமே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்