தமிழரசுக் கட்சியின் இளைஞரணி தலைவராக சேயோன் தெரிவு

தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணி தலைவராக மட்டக்களப்பை சேர்ந்த கி.சேயோன் தெரிவு செய்யப்பட்டார்.

செயலாளராக பச்சிலைப்பள்ளி தவிசாளர் சுரேன் தெரிவாகினார்.

இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் நடந்த இளைஞர் அணி நிர்வாக தெரிவில் இந்த தெரிவுகள் இடம்பெற்றன. இம்முறை இணை பொருளாளர்களாக இருவர் தெரிவாகினர்.

மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதனிற்கு இம்முறை இளைஞர் அணியில் முக்கிய பொறுப்புக்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தபோதிலும், கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பையடுத்து, அவர் எந்த பொறுப்பிலும் நியமிக்கப்படவில்லை.

About இலக்கியன்

மறுமொழி இடவும்