யாழில் வடக்கு மக்களின் தீவிர எதிப்புக்கு மத்தியில் பாகிஸ்தான் அகதிகள்!

வடக்கு மக்களின் எதிர்ப்பையும் மீறி இரண்டாம் கட்ட நடவடிக்கையாக யாழ்ப்பாணத்திலும் வெளிநாட்டு அகதி கள் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் யாழில் உள்ள சில வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.நீர்கொழும்பில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா ஆகிய நாடுகளை சேர்ந்த அகதிகளே இவ்வாறு வடக்குக்கு தற்போது அழைத்து வரப்பட்டு தங்கவைக்கப்படுகின்றனர்.

குறித்த வெளிநாட்டு அகதிகள் இரகசியமான முறையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பிரதேசம் தொடர்பாக தகவல் ஏதும் வெளியிடப்படவில்லையெனவும் தெரியவந்துள்ளது.யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பதிவுகளை மேற்கொண்டதன் பின்னரே யாழில் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் தஞ்சம் கோரி நீர்கொழும்பில் தங்கியிருந்த பாகிஸ்தான் அகதிகளில் சிலர் வடக்கை நோக்கி அழைத்துவரப்படும் செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, யாழ்ப்பாணத்துக்கு நான்கு குடும்பங்களை சேர்ந்த 13 பேர் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்