உயிர்த்த ஞாயிறு தாக்குதலாளிகளுடன் நெருங்கிய தொடர்புடைய மூவர் கைது

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலாளிகளுடன் நெருங்கிய தொடர்புடைய மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மூவரும் அம்பாறை – கல்முனையில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தற்கொலைத் தாக்குதல்களுடனும் நேரடி தொடர்பு கொண்டவர்கள் என புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்