யாழ் மாவட்டச் செயலக சூழலில் நடமாடிய இஸ்லாமிய இளைஞன் கைது

யாழ்.மாவட்ட செயலக சுற்றாடலில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய தும்மலசூாிய பகுதியை சோ்ந்த இஸ்லாமிய இளைஞா்கள் ஒருவா் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளாா்.
யாழ்ப்பான மாவட்ட செயலக சூழலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஓர் இளைஞன் நடமாடியுள்ளார். குறித்த இளைஞன் மாவட்ட செயலக சூழலில் பல தடவைகள் அங்கும் இங்குமாக திரிந்துள்ளார்.
அவ்வாறு நீண்டநேரமாக நடமாடிய இளைஞனை கண்ட சிலர் யாழ்ப்பாணம் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து மாவட்ட செயலகத்துக்கு வந்த பொலிஸாா்.
குறித்த இளைஞனை மடக்கி பிடித்தனர். பின்னா் பொலிஸாா் நடாத்திய விசாரணையின்போது குறித்த இளைஞன் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளா்.

இதனையடுத்து குறித்த இளைஞன் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா். குறித்த இளைஞன் தும்மலசூாிய பகுதியை சோ்ந்தவா் எனவும் அவருக்கு 33 வயது எனவும் கூறப்படுவதுடன்,
யாழ்ப்பாணத்துக்கு மாலைகள் விற்பனை செய்யவே வருகைதந்ததாக தெரிவித்ததாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸாா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்