முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட காஞ்சிரமோட்டை பகுதியில் விவசாய கிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று (05) மீட்கப்பட்டுள்ளது.
முள்ளியவளையினை சேர்ந்த 45 வயயுடைய சண்முகநாதன் சத்தியபவான் என்ற குடும்பஸ்தர் காஞ்சிரமோட்டையில் விவசாயம் செய்து வந்துள்ளார்.
இவரது விவசாய கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து அருகில் உள்ள விவசாயிகள் முள்ளியவளை பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை முள்ளியவளை பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தினை மீட்டு மாஞ்சோலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்
மரண விசாரணையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக முள்ளியவளை பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.