யாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்

யாழ்.வல்வெட்டித்துறை- ஊரிக்காடு பகுதியில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9மணியளவில், ஊரிக்காடு பகுதியிலுள்ள இராணுவத்தின் கடையொன்றில் இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது.

தாக்குதலின் பின்னா் இராணுவம் சுற்றிவளைப்பை நடாத்தி 3 இளைஞா்களை கைது செய்து, வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், இரண்டு வாள்களையும் மீட்டுள்ளனா்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்