தமிழ் மக்களது பொதுவேட்பாளராக களமிறங்க முன்னாள் முதல்வரும் ஆதரவாம்?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களது பொதுவேட்பாளராக களமிறங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நேற்றைய தினம் நடைபெற்ற சிவில்
தரப்புக்களது சந்திப்பிலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி , தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகளுடனும்; ஜனாதிபதித் தேர்தலில் பொதுவான நிலைப்பாடு எடுக்கும் நோக்கிலான பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளது.

இதன் போது நேற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடனும் இன்று முன்னாள் முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரனுடம் ஆகியோருடன் உரையாடி அவர்களின் சம்மதத்தினை பெற முயற்சிகள் நடந்திருந்தன.

இதன் ஒரு கட்டமாக முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சந்திப்பு நடந்திருந்த நிலையில் அவரும் தனது ஆதரவை தெரிவித்திருந்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்