எம்மை ஐந்து கட்சிகளும் முட்டாளாக்கி விட்டது: மாணவர்கள் கொதிப்பு

13 அம்சக் கோரிக்கைகளை உதாசினம் செய்து பல்கலைக்கழக மாணவர்களை, தமிழ் மக்களை ஐந்து கட்சிகளும் முட்டாளாக்கியுள்ளது என்று வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இன்று (07) சற்றுமுன் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தனர்.

இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சஜித்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது, இந்நிலையில் 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்த உங்களது நிலைப்பாடு என்ன? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது,

வேட்பாளர் ஒருவரை சுட்டுவது என்றால் நாம் இந்த 13 வலுவான கோரிக்கைகளை முன்வைத்திருக்கத் தேவையில்லை என்று பதிலளித்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்