இன அழிப்பை மறந்துவிடவேண்டுமாம் – கோட்டபாய

பேரினவாதிகளின் (பெரும்பான்மை சமூகத்தின்) மனதில் சந்தேகத்தை உருவாக்கும் சில விஷயங்களை சிறுபான்மையினர் செய்தால் மட்டுமே பெரும்பான்மை சமூகம் எதிர்வினையாற்றும். அதை சிறுபான்மையினர் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் பிறந்தால் எல்லோரும் இலங்கை குடிமக்களே . அவர்களுக்கு எல்லோருக்கும் சம உரிமை உண்டு. ஆனால் சிறுபான்மையினர் சில விஷயங்களைச் செய்யக்கூடாது. அவர்கள் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். என தெரிவித்துள்ளார் தமிழின அழிப்பு சூத்திரதாரியான கோட்டாபய ராஜபக்ச.

இந்தியாவின் பாரத் சக்தி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலின் போது “யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக உங்கள் அதிகாரிகளில் சிலருக்கு எதிராகவும், உங்களுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகிறதே என கேள்வி எழுப்பிய போது”

போர் இலகுவில் செய்து முடிக்கக்கூடிய விசயமல்ல. நீங்கள் உள்நாட்டில் சண்டையிட்டாலும் அல்லது அமெரிக்கர்கள் ஈராக்கிற்கோ அல்லது ஆப்கானிஸ்தானிற்கு சென்றோ அல்லது இங்கிலாந்து அரசு ஈராக் அல்லது ஆப்கானிஸ்தானிற்கு சென்றோ சண்டையிடுகிறார்கள் என்பது ஒரு வசதியான விஷயம் அல்ல. அது உள்நாடாக இருந்தாலும் அல்லது வெளிநாட்டிலாக இருந்தாலும், போர் ஒரு சிக்கலற்ற, இலகுவான விஷயம் அல்ல. எல்லாமே மிகவும் சுமூகமாக நடக்காது.

நாங்கள் ஒரு ஏழை நாடு, சிறிய நாடு. எனவே எங்கள் விஷயங்கள் தூக்கி. அதைச் செய்வது மிகவும் நியாயமற்றது, ஏனென்றால் ஒரு தேசமாக நாம் பௌத்தர்களாக இருக்கிறோம். நாங்கள் மிகவும் அமைதியான தேசமாக இருக்கிறோம். நமது வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையானது. நம் மதிப்புகள் உள்ளன, நமது கலாச்சாரம் வளமானது.

எனவே விமர்சிப்பதை விட, இந்த விஷயங்களை மறக்குமாறு தமிழ் புலம்பெயர்ந்தோரைக் கூட நான் கேட்டுக்கொள்கிறேன். இதை பேசிக் கொண்டிருப்பதால் யாருக்கும் பயனில்லை. மாறாக, நம் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

நான் நிச்சயமாக சொல்கிறேன், சிறுபான்மை சமூகம் இதைப் புரிந்துகொள்ள வேண்டும், பெரும்பான்மை சமூகத்தின் மனதில் சந்தேகத்தை உருவாக்கும் சில விஷயங்களை அவர்கள் செய்தால் மட்டுமே பெரும்பான்மை சமூகம் எதிர்வினையாற்றும். அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் பிறந்தால் எல்லோரும் இலங்கை குடிமகக்கள். அவர்களுக்கு எல்லோருக்கும் சம உரிமை உண்டு. ஆனால் அவர்கள் சில விஷயங்களைச் செய்யக்கூடாது. அவர்கள் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். முன்னேறிய சமூகங்களில் கூட இந்த பிரச்சனை உள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்