சிவாஜிலிங்கம் தலைமையிலும் நினைவேந்தல்!

மாவீரர் தினத்தை முன்னிட்டு தனது சுடரேற்றல் பயணத்தை கே.சிவாஜிலிங்கம் ஆரம்பித்துள்ளார்.முன்னதாக யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர்களுக்கு மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக இராச பாதை வீதியில் இன்று காலை 10.30 மணியளவில் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த காணியில் தற்போது படையினர் பாரிய இராணுவ முகாம் ஒன்றினை அமைந்துள்ளனர் .இதனாலேயே நுழைவாயிலில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து நல்லூரிலுள்ள தியாகி திலீபனின் தூபி பகுதியிலும் சுடரேற்றி
அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்