முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின், கரும்புலிகள் அணியின் சீருடைத் தொப்பி ஒன்று காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இறுதிப் போர் இடம்பெற்ற முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில், போரின் அடையாளங்கள் இன்னும் அழிவடையாது முழித்துக்கொண்டுள்ளன.
அங்கு போரின்போது பயன்படுத்தப்பட்ட குண்டுகள், துப்பாக்கி ரவைகள், வெடித்துச் சிதறிய சன்னங்கள், மக்கள் விட்டுச் சென்ற உடைமைகள், ஒளிப்படங்கள் போன்றன அண்மைக் காலங்களில் பலராலும் கண்டறியப்பட்டன.
இந்த நிலையில் நேற்று அங்கு விடுதலைப் புலிகள் அமைப்பின், கரும்புலிகள் அணியினரின் சீருடைத் தொப்பி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த பகுதியின் பிரிதொரு இடத்திலிருந்து, இலங்கை கடற்படையினரின் தொப்பி ஒன்றும் காணப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.