ஐ.நா கூட்டத் தொடருக்கு இலங்கை அமைச்சர்கள் குழு பங்கேற்காதாம்!

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் 11ஆம் திகதி திங்­கட்­கி­ழமை முதல் 29 ஆம் திக­தி­வரை ஜெனி­வாவில் நடை­பெ­ற­வுள்­ளது. இம்­முறை கூட்டத் தொடரில் இலங்­கை­யி­லி­ருந்து அமைச்­சர்கள் மட்­டக்­குழு பங்­கேற்க மாட்­டாது.

மாறாக ஜெனி­வா­வி­லுள்ள இலங்கை வதி­விட பிர­தி­நிதி ரவி­நாத ஆரி­ய­சிங்க தலை­மை­யி­லான குழு­வி­னரே 36 ஆவது கூட்டத் தொடரில் இலங்­கையின் சார்­பாக கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.
திங்­கட்­கி­ழமை முத­லா­வ­தாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் தலை­வரும் ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரும் உரை­யாற்­ற­வுள்­ளனர்.

இந்தக் கூட்டத் தொடரில் இலங்­கையின் விவ­கா­ரங்கள் எதுவும் நிகழ்ச்சி நிரலில் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை. எனினும் சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்கள் இலங்கை தமது நேர உரை­க­ளின்­போது இலங்கை குறித்து கேள்­வி­யெ­ழுப்பும் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அதா­வது ஜெனிவா அமர்­வு­க­ளின்­போது பொது­வான விவா­தங்­க­ளின்­போது பல்­வேறு தலைப்­புக்­களின் கீழ் உரை­யாற்­ற­வுள்ள சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­திகள் இலங்கை தொடர்பில் வலி­யு­றுத்­தல்­களை மேற்­கொள்­ளலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. சர்­வ­தேச மனித உரிமை கண்­கா­ணிப்­பகம் சர்­வ­தேச மன்­னிப்புச் சபை என்­பன இலங்கை குறித்து வலி­யு­றுத்­தல்­களை விடுக்­கலாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்கள் மற்றும் சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் இலங்கை தொடர்பில் பல்­வேறு உப­குழுக் கூட்­டங்­களை ஜெனிவா வளா­கத்தில் நடத்­த­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இதில் இலங்­கையின் தற்­போ­தைய மனித உரிமை நிலைமை குறி்த்தும் கவனம் செலுத்­தப்­ப­ட­வுள்­ளது. இலங்­கை­யி­லி­ருந்து சில பொது அமைப்­புக்கள் இம்­முறை ஜெனி­வா­வுக்கு விஜயம் செய்து இவ்­வா­றான உப­குழுக் கூட்­டங்­களில் கலந்­து­கொள்­ள­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

இதே­வேளை இலங்கை உட்­பட பல்­வேறு நாடு­க­ளுக்கு மேற்­கொள்­ளப்­பட்ட விஜ­யங்கள் தொடர்பில் பல­வந்­த­மாக காணாமல் ஆக்­கப்­பட்டோர் தொடர்­பாக ஆராயும் ஐ.நா. வின் விசேட குழு­வா­னது ஒரு நீண்ட அறிக்­கையை ஐ.நா. மனித உரிமை பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்­பித்­தி­ருக்­கி­றது.

மேலும் இம்முறைக் கூட்டத் தொடரில் பலவந்தமாக காணாமல்போனோர் தொடர்பாக ஐ.நா.வின் விசேட செயற்குழுவின் அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்படும்போது இலங்கை தொடர்பான ஒருசில விடயங்கள் முன்வைக்கப்படலாம் என எதிர்பார்க்க ப்படுகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்