அதிகாரங்கள் அனைத்தும் தற்போது பிரதமர் வசம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அனைத்து அதிகாரங்களையும் தற்போது தனது கட்டுப்பாட்டுக்கு கீழ் வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியளாலர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், எந்தவொரு அதிகாரத்திலும் தான் நுழைய மாட்டேன் என்று கூறி ஆட்சியையும் அதிகாரத்தையும் கைப்பற்றிய ரணில் இன்று அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் திருட்டுத்தனமான சட்டத்தை அமுல்படுத்துவதற்கு சபாநாயகரும் கூட இடம் கொடுத்து வருகின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்ட மூலங்கள் என்ற வகையில் சிங்களத்தில் ஒன்றும், ஆங்கிலத்தில் ஒன்றும் என இருவகை சட்ட மூலங்கள் தற்போது காணப்படுவதாகவும் தினேஷ் குணவர்தன மேலும் கூறியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்