சசிகலாவை வெளியில் எடுக்க உதவும் பிரபலம் யார் தெரியுமா?

பரப்பன அக்ரஹாரா சிறைவிதிகளை மீறியதால் பரோல் கிடைக்காமல் தவித்து வருகிறார் சசிகலா. ‘ கணவரைப் பார்ப்பதற்காக பரோலில் வரும் எண்ணத்தில் இருக்கிறார் சசிகலா. அவரது விண்ணப்பம் இன்னும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவரது பரோலுக்காக காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கடுமையாக முயற்சி செய்து வருகிறார்’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

பெங்களூரு சிறைத்துறை டி.ஐ.ஜியாக இருந்த ரூபாவின் அதிரடி நடவடிக்கையால், சசிகலாவுக்கு சிறையில் வழங்கப்பட்ட சலுகைகள் வெளியுலகுக்குத் தெரிய வந்தது. பொதுவாக, சிறைச்சாலைகளில் இதுபோல் நடப்பது வழக்கம்தான் என்றாலும், சிறை வீடியோ காட்சிகள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதனால், பலமுறை பரோலில் வர விரும்பியும் கர்நாடக அரசு அனுமதிக்கவில்லை.

இந்நிலையில், கணவர் நடராஜனை சந்திக்க பரோலில் சசிகலா வர இருக்கிறார் என்ற தகவல் மன்னார்குடி வட்டாரத்தில் இருந்து வெளியாகியுள்ளது. ‘ பரோல் கேட்டு அவர் விண்ணப்பிக்கவில்லை’ என சிறைத்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்