பிளவுபட்டுள்ள ஈபிடிபி…வரதராஜப்பெருமாளுடன் இணைய டக்ளஸ் திட்டம்?

வரவிருக்கும் தேர்தல்களினை கருத்தினில் கொண்டு தனது தாய்கட்சியுடன் ஈபிடிபியை இணைக்க டக்ளஸ் முடிவு செய்துள்ளார்.இது தொடர்பினில் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் அணியுடன் டக்ளஸ் பேச்சுக்களினை ஆரம்பித்துள்ளார்.இதனிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி ஈடுபட்டுள்ளதாக செய்திகளை மறுபுறம் அவர் கசியவிட்டுள்ளார்.

வரதராஜப்பெருமாள் தலைமையிலான ஈபிஆர்எல்எவ் பத்மநாபா அணியுடன்;, ஈபிடிபி ஏற்கனவே பேச்சுக்களை ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது.
பெரும்பாலான ஈபிடிபியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளனர்.இதனால் முற்றாக கட்சி நலிவடைந்துள்ள நிலையினிலேயே வரதராஜப்பெருமாள் தலைமையிலான ஈபிஆர்எல்எவ் பத்மநாபா அணியுடன்;, இணைய ஈபிடிபி முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகின்றது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்