ஐநாவின் 36வது தொடரில் பங்கேற்றுவிட்டு தமிழகம் திரும்பிய மதிமுக பொது செயலரும் தமிழீழ ஆதரவாளருமான வை கோபாலச்சாமி மதிமுகம் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில்
ஐ.நாவின் பிரதான அரங்கத்தில் 11தடவைகள் பேசினேன்.அதில் இலங்கையில் சுதந்திரத்துக்கு பின் தமிழர்கள் சிங்களவர்களால் எப்படி எல்லாம் ஒடுக்கப்பட்டார்கள் என்பதையும் தந்தை செல்வா சகல கட்சிகளையும் இணைத்து வட்டுக்கோட்டையில் தனியரசு தீர்மானம் நிறைவேற்றியதையும் தமிழர்களின் சாத்வீக போராட்டங்கள் சிங்களவர்களால் ஆயுதவழியில் ஒடுக்கப்பட்டதையும் இதன்பின்னரே உலகப் புகழ் பெற்ற பிரபாகரன் ஆயுத ஏந்திப்போராடினார் என்பதை தெளிவுபடுத்தினேன் என்கிறார் வைகோ.