சுவிஸ் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர் – குடும்பத்தினரின் நிலை என்ன?

சுவிஸ் நாட்டு காவல்துறையினரால் நேற்றுமுந்தினம் ஒரு தமிழ் குடும்பஸ்தர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.சுட்டுக்கொல்லப்பட்டவர் கையில் கத்தி வைத்திருந்ததாகவும் இருவர் மீது கண் இமைக்கும் நேரத்தில் கத்தியால் தாக்குதல் நடத்த முற்பட்டபோது தாம் அவரை சுட்டுக்கொன்றதாகவும் சுவிஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கத்தியால் தாக்குதல் நடத்த முற்படும் அனைவர் மீதும் துப்பாக்கிச்சூடா நடத்தப்படுகிறது என்பது பெரிய கேள்வியாக இங்கு உள்ளது. ஜரோப்பிய நாடொன்றின் காவல்துறை இவ்வாறு நடந்தமை ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்று தமிழர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஈழதேசம் இணைய ஜரோப்பிய செய்தியாளர்

 

About காண்டீபன்

மறுமொழி இடவும்