தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை வடக்கில் பூரண ஹர்த்தால்

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்துவரும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும் வடக்கில் போராட்டங்கள் வலுவடையவுள்ளன.

ஆட்சியாளர்களாலும் அரசியல்வாதிகளாலும் கைவிடப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருந்து தமது உயிரை மாய்க்க முற்பட்டுள்ள நிலையில் இப்போராட்டங்கள் வெடிக்கவிருக்கின்றன.

இப்போராட்டங்களின் ஒரு கட்டமாக எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கில் பூரண ஹர்த்தால் இடம்பெறவுள்ளது. தமிழ் மக்கள் பேரவை உட்பட வடக்கில் உள்ள 14 இற்கும் அதிகமான அமைப்புக்கள் இந்தக் ஹர்த்தாலுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளன.

மேலும், நாளை புதன்கிழமை அரசியல் கைதிகளின் பெற்றோர் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் இறை பிரார்த்தனையில் ஈடுபடவுள்ளனர்.

இதைத் தொடர்ந்து நாளை மறுதினம் வியாழக்கிழமை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பேரணி ஒன்றை நடத்தவுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்