மைத்திரிக்கு கடிதம் எழுதிய சம்பந்தன்

தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பாக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட அனைத்து அரசியல் கைதிகளும் அச்சட்டத்தின்கீழே நடத்தப்படுகின்றனர். பயங்கரவாதத் தடைச்சட்டமானது மிகவும்கொடூரமானது என உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் குடும்பத்தினர் வருமானமற்று மிகவும்வறுமையில் வாடிவரும் நிலையில், சில வழக்குகள் வவுனியாவிலிருந்து அனுராதபுரத்திற்கு மாற்றியமை தேவையற்ற முரண்பாடுகளையே தோற்றுவிக்கும். எனவே தாமதமின்றி கைதிகளை விடுவிக்குமாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இக்கடிதத்தின் பிரதிகள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நீதி அமைச்சர் தலதா அத்துகோரள, மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும்அனுப்பி வைத்துள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்