வடமராட்சி – துன்னாலைப் பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் மேலும் நீடிப்புச் செய்யபட்டுள்ளது.
எதிர் வரும் 26 ஆம் திகதிவரை குறித்த எட்டுப் பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிவான் நளினி சுபாஸ்கரன் இன்று உத்தரவிட்டார்.
வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்னும் சந்தேகத்தின்பேரில் 46 பேர் கைதுசெய்ய்பட்டு 38 பேர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.