சிறீலங்கா கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய மீனவர்களை சிறீலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்தே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

தனுஷ்கோடி – மன்னார் இடையே மீன் பிடித்து கொண்டிருந்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் எட்டுப் பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய கடற்றொழில் உபகரணங்களும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குறித்த மீனவர்களை யாழ். உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்