மகிந்தவை காட்டி தமிழ் மக்களை அச்சுறுத்தும் மைத்திரி – செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு

சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பலப்படுத்தும் முயற்சியில் மைத்திரிபால சிறிசேன மறைமுகமாக ஈடுபட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

யுத்தக் குற்றச்சாட்டுக்களில் தொடர்புடைய  மஹிந்த ராஜபக்ச மற்றும் அவருடைய சகோதர்களை பாதுகாக்கும் முயற்சியில் சிறீலங்கா ஜனாதிபதி ஈடுபட்டுள்ள அதேவேளை, மறுபுறத்தில் மஹிந்த ராஜபக்ச ஆட்சியை கைப்பற்றுவார் என தமிழ் மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் அந்த கட்சி விசனம் வெளியிட்டுள்ளது.

யாழ் ஊடாக அமையத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அக்கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்