அரசியல் கைதிகள் தனிச் சிறைக்கு மாற்றம்!

தமிழ் அரசியல் கைதிகளை வேறு சிறைக்கு மாற்றுவதாக சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன வடமாகாண ஆளுநரூடாக தனக்குத் தெரியப்படுத்தி உள்ளதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

‘ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் தான் முன்வைத்த கோரிக்கைகளுக்கு சாதனமான பதிலை அனுப்பியுள்ளார்.

உண்ணாவிரதத்தில் ஈடுபடும் மூன்று அரசியல் கைதிகளின் வழக்குகள் இன்னும் இரண்டு நாட்களுக்குள் வவுனியாவுக்கு மாற்றப்படுவதற்கான சூழல் ஏற்படும் எனவும் அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துவைத்து விட்டு ஊடகங்களுக்கு தெரியப்படுத்தப்படும்.

அத்துடன், தமிழ் அரசியல் கைதிகளை குற்றச் செயல்களுடன் ஈடுபட்ட கைதிகளுடன் வைத்திருக்கவேண்டாம் எனக் கூறியதற்கமைய, தமிழ் அரசியல் கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்