சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்திவந்ததை அரசு ஆதரவு படைகள் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தது. இந்நிலையில் பாலைவன நகராக உள்ள அல்-கர்யதைன் நகரில் ஒருமாதத்திற்கு முன்பாக சுமார் 20 நாட்களில் தொடர்ச்சியாக 116 பேரை தூக்கிலிட்டு ஐ.எஸ் இயக்கத்தினர் கொலை செய்ததாக ஐநா மனித உரிமை கவுன்சில் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
116 மக்களை தூக்கிலிட்டு பழிவாங்கிய ஐ.எஸ் இயக்கம். சிரியாவில் பரபரப்பு
மேலும் மக்கள், அரசு படைகளுக்கு ஆதரவாக இணைந்து செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு ஐ.எஸ் இயக்கத்தினர் 116 பேரையும் பழிவாங்கும் நோக்குடன் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.