30 பேர் உயிரிழந்த வழக்கில் முன்னாள் போராளிக்கு ஆயுள் தண்டனை!

பிலியந்தலை பஸ் தரிப்பிடத்தில் பஸ் ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கில், குற்றவாளியாக இனங்காணப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றின் மீதே இவ்வாறு குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது 30 பேர் பலியானதோடு, சுமார் 42 பேர் வரை காயமடைந்தனர். இதனையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பில், தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில். குற்றவாளியாக இனங்காணப்பட்டவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க நேற்று ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்