யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இன்று யாழில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி | காணொளி

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்த மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், ஏனைய தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்துமாறு கோரியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இன்று யாழில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக மாணவர்களுடன் யாழ். தொழில்நுட்ப கல்லூரி, உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் மாணவர்களும் இணைந்துகொண்டனர்.
பல்கலைக்கழக முன்றலில் இருந்து 10.30 மணிக்கு ஆரம்பமான பேரணி பலாலி வீதி, நாவலர் வீதி, கோவில் வீதி வழியாக சென்றது.கோவில் வீதியில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் வீதி வழியாக யாழ். மாவட்டச் செயலகத்தில் பேரணி சென்றடைந்தது.

அங்குவைத்து அரசியல் கைதிகள் விடுதலை கோரும் ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்று அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டு இந்த பேரணி நிறைவடைந்தது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்