ஜெனிவாவில் கலப்பு விசாரணையை நிராகரித்தது அரசாங்கம்!

இலங்கை படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தும் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கால மீளாய்வு மாநாட்டில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பில் கலப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரப்பட்டிருந்தது. கனடா, எஸ்டோனியா, கௌதமாலா மற்றும் லட்வியா ஆகிய நாடுகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தன.இந்த மாநாட்டில் இலங்கையினால் நிறைவேற்றப்பட வேண்டுமென 230 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.இந்தப் பரிந்துரைகளில் 177 ஐ இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்