வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் வணக்க நிகழ்வு

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வீரகாவியமான மாவீரர்களை நினைவேந்தல் கார்த்திகை மாதம் 21 ம் திகதிமுதல் 27 ம் திகதி வரை மாவீரர் வாரமாக கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றது.

அந்தவகையில் இம்முறை மாவீரர் வாரத்தின் முதல் நாளான இன்று வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்களின் பெற்றோர் உறவுகளால் சுடரேற்றி மலர் தூவி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்தோடு இந்த துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடந்துள்ளதாகவும் அனைத்து மாவீரர் பெற்றோரையும் தமது பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்த வருகை தருமாறும் பணிக்குழு அழைப்பு விடுத்துள்ளது .

About காண்டீபன்

மறுமொழி இடவும்