முன்னாள்போராளியை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு

மன்னார் – எருக்கலம் பிட்டி 5ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் கடந்த 13ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார் என அவரது மனைவி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மன்னார் எருக்கலம் பிட்டி 5ஆம் கட்டை பகுதியில் வசித்து வரும் 40 வயதான இராசையா குகனேஸ்வரன் என்ற 4 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளியே காணாமல் பேயுள்ளார்

கடந்த 13 ஆம் திகதி மேசன் வேலைக்காக மன்னார் சென்ற தனது கணவர் இது வரை வீட்டிற்கு வரவில்லை என அவரது மனைவி தெரிவித்தார்.

தனது கணவர் கடந்த 2013 ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரை தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்டவர் என மனைவி தெரிவித்துள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்