முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லத்திலும் மாவீரர்நாள் நினைவேந்தல் !

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

இறுதியாக வீரர்களை விதைத்த மாவீரர் துயிலுமில்லமாக காணப்படும் இந்த துயிலுமில்லம் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இங்கே இறுதிப்போர் உக்கிரமடைந்த காலபகுதியில் பல நூற்றுக்கணக்கான மாவீரர்கள் விதைக்கப்ட்டிருந்தனர்.

இந்த நிலையில் முதன்முறையாக இந்த வருடம் முள்ளிவாய்க்கால் மக்கள் ஒன்றிணைந்து இந்த துயிலுமில்ல வளாகத்தினை துப்பரவு செய்து ஏற்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்துவருகின்றனர்.இதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி மிகவும் உணர்வெளிச்சியுடன் இங்கு மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இதேவேளை இதற்க்கு அன்மையாகவுள்ள இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லத்திலும் மாவீரர்நாள் நினைவேந்தல் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்