தமிழீழ ஆதரவாளர் விஜயகாந்த் காலமானார்

தமிழீழ ஆதரவாளர் விஜயகாந்த் காலமானார்.விஜயகாந்த் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் சென்னை மணப்பாக்கம் மியாட் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அந்நிலையில் வைத்தியசாலை மற்றும் விஜயகாந்தின் இல்லம் அமைந்துள்ள சாலிக்கிராமம் பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கேப்டன் விஜயகாந்த் என பரவலாக அறியப்படும் விஜயராஜ் அழகர்சாமி எனும் விஜயகாந்த், இந்திய […]

விலைபோன தமிழ்த் தரப்புக்களே தமிழ் வேட்பாளரை நிறுத்த முயற்சி : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

விலைபோயுள்ள தமிழ்த் தரப்புக்களே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று கோரிவருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்த அவர், “தமிழ் மக்களைப்பொறுத்த வரையில் ஒரேயொரு தெரிவுதான் இருக்கின்றது. இந்தத் தேர்தலை பகிஸ்கரிப்பதுதான். அதனையே நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். தமிழ் அரசியலில் வரப்போகின்ற ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் […]

புலிகளின் சின்னம் பொறித்த ஆடை அணிந்த . இளைஞனுக்கு பிணை

மாவீரர் தினம் அன்று, கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு விடுதலைப்புலிகளின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய படம் பொறித்த ஆடையுடன் வந்த இளைஞனை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தது, சாவகச்சேரி நீதிமன்றில் குறித்த வழக்கு, இன்றைய தினம் புதன்கிழமை எடுக்கப்பட்ட போது, கடந்த ஒரு மாத காலமாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டார். பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞரை பிணையில் விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் ஆட்சேபனை தெரிவிக்காததையடுத்து […]

ரணிலே மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும் என்கிறார் டக்ளஸ்!

தற்போதுள்ள நிலைமையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், மீண்டும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகினால் மாத்திரமே நாட்டினை முன்னோக்கிகொண்டு செல்ல முடியும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாதெரிவித்தார் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (26.12.23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். குறிப்பாக பலர் ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கலாம் ஆனால் பிரேக் டவுன் ஆன வண்டி போன்று இருந்த நாட்டினை ஓரளவிற்கு ஓடக்கூடிய வண்டியாக தற்போதுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாற்றியுள்ளார் எனவே எதிர்வரும் ஜனாதிபதி […]

ஆழிப்பேரலையில் காவு கொல்லப்பட்டவர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்

ஆழிப்பேரலையில் காவு கொல்லப்பட்டவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கில் இடம்பெற்றது. உடுத்துறை சுனாமிப் பொது நினைவாலயத்தில் உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் நினைவேந்தல் இடம்பெற்றது. சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. தொடர்ந்து உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மாலையிட்டு தீபங்கள் ஏற்றி உணவுகளை படைத்து உறவினர்கள் அஞ்சலித்தனர். இதன்போது பெருமளவான பொதுமக்கள்,மதகுருமார்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டதுடன் உறவினர்கள் […]

யாழில். 20 இளைஞர்களை புனர்வாழ்வுக்கு அனுப்ப நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் காவல்துறையினரின் விசேட நடவடிக்கை காரணமாக கைதான 20 இளைஞர்களை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்.பிராந்திய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,யாழ்ப்பாணத்தில் போதைக்கு எதிராக காவல்துறையினரினால் கடந்த சில தினங்களாக முன்னெடுப்பட்டு வரும் விசேட நடவடிக்கையின்போது , போதைப்பொருளை கடத்தியமை , , உடைமையில் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் 100கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 27 பேரும் , ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த […]

த.வி.புலிகள் ரணிலை நம்ப வேண்டாம் என்று கூறிய விடயம் இன்று நிதர்சனமாகியுள்ளது.

“தமிழீழ விடுதலைப் புலிகள் அன்று ரணில் விக்கிரமசிங்கவை நம்ப வேண்டாம் என்று கூறிய விடயம் இன்று நிதர்சனமாகியுள்ளது.” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். ஜனாதிபதியை பாராட்டவேண்டும் ஏனென்றால் சரியான தரப்புகள் யார், ஏமாற்றக்கூடிய தரப்புகள் யார்? ஏமாற தயாரில்லாத தரப்புகள் யார் என்பதை அவர் சரியாக கண்டுபிடித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். ஒரு தெளிவான நிலைப்பாட்டை அறிவித்த பிறகாவது தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுகின்ற செயல்பாடுகளிலே ஏனைய அரசியல் கட்சிகளும் […]

யாழ் தொண்டைமானாறு வாவி திறப்பு!

வளிமண்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் கடந்த (12.12.2023) திகதியில் இருந்து (20.12.2023) வரையான காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக தொண்டமானாறு வாவி இன்று திறந்து வைக்கப்பட்டது. கனமழை காரணமாக தேக்கிவைக்க முடியாத மேலதிக நீரினை பெரும்கடற்பரப்பில் செல்லுவதற்கு திறந்து விடப்பட்டன. இதனை யாழ்ப்பாண மாவட்ட நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர்களினால் திறந்து விடப்பட்டன. குறித்த வாவியில் மீனவர்களால் மீன்பிடி ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னார்-பேசாலையில் விசேட சுற்றிவளைப்பு சோதனை!

மன்னார் -பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (22.12.2023) காலை முதல் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசேட சுற்றிவளைப்பு சோதனைகளை முன்னெடுத்தனர். பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள வீடுகளுக்குச் சென்ற பொலிஸார்,விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் போதைப் பொருள் சோதனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர். பிரதி பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலே பேசாலை பொலிஸ் பிரிவில் குறித்த […]

புதிய அரசமைப்பினூடாக தமிழர்களுக்குத் தீர்வாம்! தமிழ்க் கட்சிகளிடம் ஒப்பித்தார் ஜனாதிபதி

புதிய அரசமைப்பினூடாகத் தமிழர்களுக்குத் தீர்வு வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தமிழ்க் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் நேற்று இடம் பெற்றது. இந்தச் சந்திப்பின்போதே தமிழ்க் கட்சிகளிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதிரணில் விக்கிரமசிங்க. இந்தச் சந்திப்பின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது. தமிழர்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 13ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் இதன்போது தெரிவித்துள்ளார். இதற்கு, 13ஆவது திருத்தம் என்பது தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான ஒட்டுமொத்தத் தீர்வுத்திட்டம் […]

யாழில் போதை பொருளுடன் தொடர்புடைய 102 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் கடந்த 4 நாட்களில் 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் காவற்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் பாவனையாளர்கள், போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தவர்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் எனும் குற்றச்சாட்டிலையே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண காவற்துறை பிராந்தியத்தில் 70 பேரும், காங்கேசன்துறை காவற்துறை பிராந்தியத்தில் 32 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டாம் கட்ட நிதியை விடுவித்தது உலகவங்கி

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட முன்னேற்றகரமான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அடுத்து இலங்கைக்கான இரண்டாம் கட்ட நிதியுதவியாக 500 மில்லியன் டொலர்களை உலக வங்கி விடுவித்துள்ளது. இலங்கையின் வரவு, செலவுத்திட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் குறித்த நிதியுதவியை வழங்க கடந்த ஜுன் மாதம் 28 ஆம் திகதி உலகவங்கி அனுமதியளித்தது. பொருளாதார ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தல், வறிய மற்றும் நலிவுற்ற சமூகங்கள் மத்தியில் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைத்தல், அனைவரையும் உள்ளடக்கிய தனியார்துறை மீட்சிக்கு ஒத்துழைத்தல் ஆகியவற்றுக்கு உதவக்கூடியவகையில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இத்திட்டத்தின் […]