மன்னார்-பேசாலையில் விசேட சுற்றிவளைப்பு சோதனை!

மன்னார் -பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (22.12.2023) காலை முதல் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசேட சுற்றிவளைப்பு சோதனைகளை முன்னெடுத்தனர். பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள வீடுகளுக்குச் சென்ற பொலிஸார்,விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் போதைப் பொருள் சோதனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர். பிரதி பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலே பேசாலை பொலிஸ் பிரிவில் குறித்த […]

புதிய அரசமைப்பினூடாக தமிழர்களுக்குத் தீர்வாம்! தமிழ்க் கட்சிகளிடம் ஒப்பித்தார் ஜனாதிபதி

புதிய அரசமைப்பினூடாகத் தமிழர்களுக்குத் தீர்வு வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தமிழ்க் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் நேற்று இடம் பெற்றது. இந்தச் சந்திப்பின்போதே தமிழ்க் கட்சிகளிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதிரணில் விக்கிரமசிங்க. இந்தச் சந்திப்பின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது. தமிழர்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 13ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் இதன்போது தெரிவித்துள்ளார். இதற்கு, 13ஆவது திருத்தம் என்பது தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான ஒட்டுமொத்தத் தீர்வுத்திட்டம் […]

யாழில் போதை பொருளுடன் தொடர்புடைய 102 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் கடந்த 4 நாட்களில் 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் காவற்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் பாவனையாளர்கள், போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தவர்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் எனும் குற்றச்சாட்டிலையே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண காவற்துறை பிராந்தியத்தில் 70 பேரும், காங்கேசன்துறை காவற்துறை பிராந்தியத்தில் 32 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டாம் கட்ட நிதியை விடுவித்தது உலகவங்கி

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட முன்னேற்றகரமான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அடுத்து இலங்கைக்கான இரண்டாம் கட்ட நிதியுதவியாக 500 மில்லியன் டொலர்களை உலக வங்கி விடுவித்துள்ளது. இலங்கையின் வரவு, செலவுத்திட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் குறித்த நிதியுதவியை வழங்க கடந்த ஜுன் மாதம் 28 ஆம் திகதி உலகவங்கி அனுமதியளித்தது. பொருளாதார ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தல், வறிய மற்றும் நலிவுற்ற சமூகங்கள் மத்தியில் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைத்தல், அனைவரையும் உள்ளடக்கிய தனியார்துறை மீட்சிக்கு ஒத்துழைத்தல் ஆகியவற்றுக்கு உதவக்கூடியவகையில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இத்திட்டத்தின் […]

ருவாண்டா இனப்படுகொலையில் ஈடுபட்ட முன்னாள் மருத்துவருக்கு 24 ஆண்டுகள் சிறை!!

ருவாண்டா இனப்படுகொலையில் ஈடுபட்ட முன்னாள் மருத்துவருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. 1994 ஆம் ஆண்டு டுட்ஸி இனப்படுகொலையில் ஈடுபட்டதற்காக ருவாண்டாவின் முன்னாள் மகப்பேறு மருத்துவர் சோஸ்தென் முனியேமனா (Sosthene Munyemana) 24 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இனப்படுகொலை நடந்து சுமார் மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு இந்த தீர்ப்பு வந்துள்ளது. 68 வயதான சோஸ்தென் முனியேமனா இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் ஒரு இனப்படுகொலைக்கு உதவியது ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டார். […]

GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!

உலகத் தமிழர் பேரவையும், கனேடிய தமிழ் காங்கிரஸும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் சந்தித்து கலந்துரையாடியமைக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம் வெளியிட்டுள்ளார். பாரிய மனித உரிமை மீறல்களுக்காக மஹிந்த ராஜபக்ஸ மற்றும் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோர் மீது 2023 ஆம் ஆண்டு ஜனவரி கனேடிய அரசு தடைகளை விதித்தமையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், இனப்படுகொலை என்பவற்றுக்கு பொறுப்புக் கூறலை வலியுறுத்தி பல வருட போராட்டத்திற்கு பின்னரே இந்த தடை விதிக்கப்பட்டதாகவும் […]

சம்மந்தனின் ஒரு முகமூடியே உலக தமிழர் பேரவை!

உலக தமிழ் பேரவையின் ஒரு முகமூடி சுமந்திரன், சம்மந்தன் இவர்கள் ஒற்றையாட்சியை பலப்படுத்தி அதற்குள் தமிழர்களை கொண்டு சென்று புதைத்து எதிர்காலத்தை இல்லாமல் செய்வதும் 13 ஆவது திருத்த சட்டத்தை நடை முறைப்படுத்த கோருவதும் இலங்கை அரசை ஒரு நியாயமான அரசாக காட்டுவது மட்டும் தான் இவர்களது நோக்கம் எனவே தமிழ் மக்கள் ஏமாந்து விடக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசய மக்கள் முன்னணி கட்சி செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். கடந்த ஒரு வாரமாக […]

பொதுநிதி செலவினத்துக்கு பொறுப்புக்கூறாத இராணுவம் மனித உரிமை மீறலுக்கு எப்படி பொறுப்புக்கூற வைப்பது? அம்பிகா சற்குணநாதன் கேள்வி

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் பொது நிதிசார் செலவினங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாத நிலையில், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவர்களை எவ்வாறு பொறுப்புக்கூறவைக்க முடியும் என சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியிருக்கின்றார். போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னரும் கல்வி மற்றும் சுகாதாரத்துறையுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுவருவது குறித்து பல்வேறு தரப்பினராலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் பாதுகாப்புத்துறைக்கு 423 பில்லியன் […]

பொலிஸாரின் தவறான செயற்பாடுகளால் சித்திரவதைக்குள்ளாகுகின்றனர் மக்கள்! இரா.சாணக்கியன்

ஜனாதிபதி மீது உயர்மட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு தனிப்பட்ட குரோதங்கள் இருப்பதன் காரணமாக அவர்களிடையே உள்ள முரண்பாடுகளை வைத்து மக்களை வதைக்கும் நிலையேற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சிறையில் பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சென்று பார்வையிட்டுள்ளார். கடந்த 27 ஆம் திகதி மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் மாவீரர் நினைவேந்தல் தினத்தற்கு மாவீரர்களை நினைவேந்தல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் விடுதலைப் […]

கஜேந்திரகுமாரை திருப்பி அனுப்பிய சிங்கள காடையர்!

திம்புலாகல, திவுலபத்தனை கிராமத்திற்கு சென்ற தமிழ் தேசிய முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக அக்கிராம மக்கள் குழுவொன்று வளமண்டி பாலத்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இன்று (15.12.23) காலை சென்ற நாடாளுமன்ற உறுப்பினரை பயணிக்க அனுமதிக்கவில்லை, சுமார் ஒன்றரை மணி நேரம் வளமண்டி பாலத்திற்கு அருகில் வாகனத்துக்கு உள்​ளேயே இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் கிராம மக்களின் கூச்சல்களுக்கு மத்தியில் திரும்பிச் சென்றார். அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மற்றும் பொல்கஹ அரவ பிரதேசத்தைச் […]

உலகத்தமிழர் பேரவை:புதிய உருட்டின் பங்காளரில்லை-எம்.ஏ.சுமந்திரன்

உலகத்தமிழர் பேரவையின் புதிய உருட்டான இமயமலைப் பிரகடனத்துக்கும் தமக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தனிநபரும் சமாதானமாகவும், கௌரவத்துடனும், நம்பிக்கையுடனும், எவ்வித பயமும் சந்தேகப்படுதலுமின்றி சமமான உரிமைகளை அனுபவித்து வாழக்கூடிய ஒரு இலங்கை உருவாக்கப்பட வேண்டும் .அத்தகைய தொனிப்பொருளை மையப்படுத்திய ‘இமயமலைப் பிரகடனம்’ உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரனால்; ரணில் விக்கிரமசிங்கவிடம் கடந்த வாரம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்தப் பிரகடனத்தை […]

இரணைமடுவைச் சுற்றியுள்ளோர் அவதானம்!

இரணைமடு குளத்திற்கான நீர் வரத்து அதிகமாக இருப்பதால் இன்று இரவு தொடர்ச்சியாக மழை பெய்யுமானால் குளத்தின் வான் கதவுகள் பாதுகாப்பு கருதி திறக்கப்படும். இவ்வாறு கதவுகள் திறக்கப்படும் போது சிறிய அளவிலான திறப்புகளே இடம்பெறும். இதனால் பாரிய அனர்த்தங்கள் எதுவும் ஏற்படாது. இருந்த போதிலும் குளத்தின் கீழ் பகுதியில் இருக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.