தற்கொலைக் குண்டுதாரியான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் காசிமிடம் இருந்து கொழும்பில் வைத்து, 20 இலட்சம் ரூபாவைப் பெற்றதை, அவரது சகோதரியான, மொகமட் நியாஸ் மதனியா ஒப்புக் கொண்டுள்ளார். சஹ்ரானின் இளைய சகோதரியான 25 வயதுடைய மதனியா நேற்றுமுன்தினம் காத்தான்குடியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். முன்னதாக அவரது கணவன் நியாஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தார். நேற்றுமுன்தினம் மாலை மதனியாவின் வீட்டைச் சோதனையிட்ட போது, அங்கிருந்து 20 இலட்சம் […]
Category: செய்திகள்
அதிமுகவை கைப்பற்றுவாரா சசிகலா?
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை கலைப்பது சசிகலா, தினகரன் குடும்பத்தின் விருப்பமாக இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, ஒபிஎஸ் ஆதிக்கத்தை அதிமுகவில் காலி செய்து அந்த இடத்துக்கு வர விரும்புவதாகவே தெரிகிறது. உண்மையில் தினகரன் சசிகலாவுக்கு அதிமுகவில் உள்ள வாய்ப்பு என்பது என்பத மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு பிறகு தெரிந்துவிடும். தேன்கூடாக இருந்த அதிமுக என்ற கட்சிக்கு ஜெயலலிதா ராணி தேனீயாக இருந்தார். அவர் இறந்த பின்னர் அதிமுக என்ற […]
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் கைவிடப்பட்டி நிலையில் இருந்த பொதி!
கைவிடப்பட்டிருந்த நிலையில் இருந்த பொதி ஒன்று தொடர்பில் பொலிசார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். யாழ்.இனுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்திலேயே இச்சோதனை இடம்பெற்றுள்ளது.
ஜந்து லாம்பு சந்தியில் உந்துருளி வெடித்தது!
புறக்கோட்டை ஜந்து லாம்பு சந்தியில் உந்துருளியொன்று வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட உந்துருளியை சோதனையிட்ட பாதுகாப்பு படையினர் குறித்த உந்துருளியை இவ்வாறு வெடிக்க வைத்துள்ளனர். சுமார் ஒரு மணித்தியால தேடுதலின் பின்னர் உந்துருளி கண்டுபிடிக்கப்பட்டு வெடி வைத்து தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.
அவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது
கொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும், 3 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். செப்பு வயர் தொழிற்சாலை என்ற பெயரில், இந்த தொழிற்சாலையிலேயே குண்டுகள் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது, சிறப்பு அதிரடிப்படையினர் நேற்று பிற்பகல் 2.45 மணியளவில், அதனைச் சுற்றிவளைத்து அங்கிருந்த 12 பேரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில், 9 பேர் பாகிஸ்தானியர்கள் என்றும், 3 பேர் இந்தியர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் அவிசாவளையில் உள்ள […]
பலரின் பதவிகளை பறிக்கவுள்ள மைத்திரி-நாளை வெளியாகிறது அறிவிப்பு!
அடுத்து வரும் 24 மணி நேரத்தில் நாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளது என சிறீலங்கா அதிபர் மைத்திரி பால சிறீசேனா தெரிவித்துள்ளார். இன்று மாலை நாட்டு மக்களுக்கு அவர்கள் வழங்கிய உரையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக பாதுகாப்புத்துறையில் உள்ள அதிகாரிகளே இவ்வாறு மாற்றங்களுக்கு உள்ளாக்கப்படவுள்ளனர் என மைத்திரி மேலும் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளார்.
தனது மதத்தின் பெயரால் இந்த தாக்குதலை நடத்துகிறேன் – தற்கொலைக் குண்டுதாரி தாயாருக்கு எழுதிய மன்னிப்புக் கடிதம் சிக்கியது
கொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல், தாக்குதல் நடத்திய நபர்களால் பயன்படுத்தப்பட்ட தெமட்டகொட மகாவில கார்டனில் உள்ள வீட்டை, கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளும் சிறப்பு அதிரடிப்படையினரும் முற்றுகையிட்டனர். அப்போது, அங்கிருந்த ஒரு தற்கொலைக் குண்டுதாரி குண்டை வெடிக்க வைத்தார். அதில், மூன்று காவல்துறை அதிகாரிகளும், ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளும் […]
10 நிமிடங்களுக்கு முன்னரும் கொடுக்கப்பட்ட புலனாய்வு எச்சரிக்கை
சிறிலங்காவில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன என்று சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. கொழும்பில் நேற்று அலரி மாளிகையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்தார். “தாக்குதல் நடத்தப்படுவதற்கு 10 நிமிடங்கள் முன்னதாகக் கூட, உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளை வெளிநாட்டு புலனாய்வு அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். ஏப்ரல் 4ஆம் நாள் தொடக்கம், இந்த புலனாய்வு எச்சரிக்கைகள் காலத்துக்குக் காலம் சிறிலங்கா அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. […]
கிளிநொச்சியில் 16 மோட்டார் குண்டுகள் மீட்பு
கிளிநொச்சியில் 16 மோட்டார் குண்டுகள் கிளிநொச்சி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட விடுதலை புலிகளின் பெண்கள் பயிற்சி முகாம்களிலிருந்தே, குறித்த மோட்டார் குண்டுகள் கிடைக்கப்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸாரால் அங்கு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதே, இந்த மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.
திட்டமிட்டு நடத்தியது ஐ.எஸ்! ஆதாரம் படங்கள் வெளியாகியுள்ளது!
இலங்கையில் நடந்த தாக்குதலை திட்டமிட்டு வழி நடத்தியது ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்று தெரிய வந்துள்ளது. நேற்று ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவு இணையம் ஒன்றில் மூன்று தற்கொலைப் படை பயங்கரவாதிகளின் படம் வெளியிடப்பட்டது. அந்த படங்களில் அபு உபைதா, அப்துல்பாரா, அப்துல் முக்தர் ஆகிய 3 ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்ளனர். அவர்கள் ஐ.எஸ். கொடிகளை பிடித்தப்படி நிற்கிறார்கள். இவர்கள் மூவரும் கொழும்பில் தாக்குதல் நடத்திய தற்கொலை படையில் இடம் பெற்று இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேரைக் காணவில்லை
சிறிலங்காவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை அடுத்து, கொல்லப்பட்ட 11 வெளிநாட்டவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தியர்கள் மூவர், போர்த்துக்கல் நாட்டவர் ஒருவர், துருக்கியர்கள் இருவர், பிரித்தானியர்கள் மூவர், பிரித்தானிய மற்றும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்படாமல் 25 […]
குண்டுவெடிப்புகளில் பலியானோர் தொகை 290 ஆக உயர்ந்தது
சிறிலங்காவில் நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் தேவாலயங்களிலும், ஆடம்பர விடுதிகளிலும், நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் மேலும் 500 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது. கொழும்பில் 1000 இராணுவத்தினர் இந்த தாக்குதல்களை அடுத்து, கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 1000 இராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். 24 கைது நேற்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து கைது செய்யும் […]