செயற்திட்ட உதவியாளர் நியமனம் இடை நிறுத்தம்

அண்மையில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய செயற்திட்ட உதவியாளர் நியமனம் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தலில் இடை நிறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, யாழ் மாவட்ட செயலகத்தில் கையொப்பமிட்டு வந்த புதிய நியமனதாரிகள் இன்று தேர்தல் செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று தேர்தல் செயலக அதிகாரிகள், யாழ் மாவட்ட செயலகத்தில் நியமனம் பெற்றவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்கள். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டதாக தெரிவித்து, ஜனாதிபதி தேர்தலின் பின்னரே இவர்கள் கடமைகளை பொறுப்பேற்கலாமென்றும், நாடாளாவிய ரீதியில் இந்த நியமனம் […]