தமிழ் மக்கள் கூட்டணியை பதிவதற்கான விண்ணப்பத்தை மீளப்பெற்றார் விக்கி

தமிழ் மக்கள் கூட்டணியை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக தேர்தல் திணைக்களத்தில் கொடுத்திருந்த விண்ணப்பத்தை அதன் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் திரும்பப் பெற்றிருப்பதாகத் தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்த விண்ணப்பத்தை அவர் கொடுத்திருந்த போதிலும், பொதுத் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்கள் கோரப்படும் வரையில் அதற்கான அங்கீகாரம் தேர்தல் திணைக்களத்தினால் கொடுக்கப்படவில்லை. அதனால், ஈ.பிஆர்.எல்.எப். கட்சியின் பெயரை ;தமிழ்த் தேசிய மக்கள் கூட்டணி என மாற்றி மீன் சின்னத்தில் அவரது கட்சி பொதுத் தேர்தலில் களமிறங்கியிருந்தது. ஒரு […]

கூட்டமைப்பில் நல்லவர் வெளியே:கெட்டவர்கள் உள்ளே?

கூட்டமைப்பு கடந்த காலத்தில் உரிமை அரசியலை தவிர்த்து சலுகை அரசியலை முதன்மைப்படுத்தி மேற்கொண்ட செயற்பாடுகளே இம்முறை தேர்தலில் கணிசமானளவு மக்கள் சிங்கள கட்சிகளுக்கும் அரசாங்க சார்பு தமிழ் கட்சிகளுக்கும் வாக்களிக்கும் நிலைமையை உருவாக்கியிருக்கின்றதென முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதே தவறை மீண்டும் செய்து எமது 70 வருட கால போராட்டத்துக்கு சாவு மணி அடித்துவிடாதீர்கள எனவும் அவர் கோரியுள்ளார். வடக்கு- கிழக்கு ரீதியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. தலைவர் தம்பி […]

விக்கினேஸ்வரன் தலைமை மாற்று அணியில் ரெலோ, புளொட் இணைவா?

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாகும் மாற்று அணியில் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது தமிழரசுக் கட்சியின் அண்மைய கால செயற்பாடுகள் மற்றும் கொள்கை நிலைப்பாடுகளில் பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் கடும் அதிருப்பதியடைந்திருப்பதாக தெரிகிறது. இதனால் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பில் இந்த இரண்டு கட்சிகளும் இரகசிய சந்திப்பொன்றில் ஈடுபட்டிருக்கின்றனர். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழரசுக் கட்சி […]

வலுக்கின்றது முன்னாள் முதலமைச்சர் கூட்டணி!

தாங்கள் தான் உண்மையான மாற்று அணியென தமிழ் தேசிய மக்கள் முன்னணி முரண்டுபிடிக்க வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணி ஒன்றை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்கள் தீவிரம் பெற்றுள்ளன. வடக்கு கிழக்கு மாவட்டங்களை சேர்ந்த புத்திஜீவிகளும் சிவில் சமூக பிரமுகர்களும் கட்சி தலைவர்களும் கடந்த சனிக்கிழமை முதல் விக்னேஸ்வரனுடன் பலமான மாற்று அணி ஒன்றினை அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நல்லூர் கோவில் வீதியிலுள்ள […]

இனப்பிரச்சினைக்கு தீர்வை கோட்டாவிடம் இந்தியா வலியுறுத்தும் – விக்னேஸ்வரன்

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்தியா வலியுறுத்தும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்து புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தமை குறித்து வாரம் ஒரு கேள்வி பதிலில் சி.வி.விக்னேஸ்வரனிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவி ஏற்ற மறுநாளே இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கொழும்பு […]

தமிழ் மக்கள் பாதுகாப்பான ஒரு சூழலை விரும்புகிறார்கள் – வாழ்த்துச் செய்தியில் சி.வி.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழ் மக்கள் பாதுகாப்பான ஒரு சூழலை விரும்புகின்றார்கள் எனவும், தேர்தல் முடிவுகள் இந்நாட்டு மக்கள் இன ரீதியாக இரு துருவங்களாகப் பிரிந்திருப்பதை வெளிக்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சி.வி.விக்கேஸ்வரன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த செய்தியில், “நாட்டில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் இந்நாட்டு மக்கள் இன ரீதியாக […]

தமிழ்த் தேசியத்தில் இருந்து சிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலியுள்ள தமிழ்த் தலைமைகளின் முடிவுகள்! – இரா.மயூதரன்.

தமிழ் மக்களை, தமிழ் மக்களின் நிலையில் நின்று தமிழர் தேசத்தின் நோக்கு நிலையில் நின்று வழிநடாத்தவல்ல நேரிய தலைவனில்லாத சூழமைவில் நடைபெறும் மூன்றாவது சிறிலங்கா சனாதிபதித் தேர்தலானது வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த் தேசியத்தில் இருந்து சிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலும் வகையிலேயே இன்றைய தமிழ்த் தலைமைகளின் முடிவுகள் அமைந்துள்ளது. சிறிலங்கா சனாதிபதித் தேர்தலானது குறித்தது குறித்தவாறு 2019 இறுதியில் ஏதோவொரு தினத்தில் நடக்கும் என்பது 2015 சனவரி 8 இல் மைத்திரி […]

எம்மை ஐந்து கட்சிகளும் முட்டாளாக்கி விட்டது: மாணவர்கள் கொதிப்பு

13 அம்சக் கோரிக்கைகளை உதாசினம் செய்து பல்கலைக்கழக மாணவர்களை, தமிழ் மக்களை ஐந்து கட்சிகளும் முட்டாளாக்கியுள்ளது என்று வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இன்று (07) சற்றுமுன் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தனர். இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சஜித்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது, இந்நிலையில் 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்த உங்களது நிலைப்பாடு என்ன? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, வேட்பாளர் ஒருவரை சுட்டுவது என்றால் நாம் இந்த 13 […]

சஜித் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி இல்லை! விக்கி கருத்து

வெளிப்படைத் தன்மை இல்லாத தேர்தல் விஞ்ஞாபனத்தை நம்பி நாம் எவ்வாறு வாக்களிக்க முடியும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். வாராந்தம் கேள்வி பதிலில், புதிய ஜனநாயக முன்னணியியன் ஜனாதிபதி வேட்பாளருடைய தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவந்துள்ள நிலையில் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த முடியுமா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தென்னிலங்கையின் இரு பிரதான கூட்டுக்கட்சிகளின் சிங்கள வேட்பாளர்கள் தமது 13 அம்சக் கோரிக்கைகளை […]

நாம் ஆதரிப்பவர் தோற்காமல் இருக்கவே ஆதரவை அறிவிக்கவில்லை – விக்கி

ஜனாதிபதித் தேர்தலில் தாம் ஆதரவு தெரிவித்த வேட்பாளர் வெற்றிபெறாமல் போனால் எமக்கு சிரமமாக இருக்கும் என்பதனாலேயே மக்களை சிந்தித்து வாக்களிக்க கோரியதாக வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கையை பரிசீலித்து வருவதாகவும் அடுத்த 3 நாட்களில் அதனை ஆராய்ந்து சரியான தீர்மானத்தை அறிவிப்போம் என்றும் அவர் கூறினார். யாழில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், வேட்பாளர்களில் அறிக்கையில் சிங்களம், […]

விரும்பிய வேட்பாளருக்கு அஞ்சல் வாக்கை பதிவு செய்யுமாறு 5 தமிழ்க்கட்சிகள் கோரிக்கை

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், இதில் தமிழ்மக்கள் தவறாது வாக்களிக்குமாறு ஐந்து தமிழ்க்கட்சிகள், கோரியுள்ளன. எனினும், யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை தமிழ் மக்களையே எடுக்குமாறும் அந்தக் கட்சிகள் குறிப்பிட்டுள்ளன. ஐந்து தமிழ்க்கட்சிகள் இணைந்து கையெழுத்திட்ட 13 அம்ச கோரிக்கைகளை எந்தவொரு பிரதான அதிபர் வேட்பாளரும் ஏற்றுக் கொள்ளாத நிலையில், இந்தக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் நேற்று பிற்பகல், 4 மணியளவில் யாழ்ப்பாணத்தில் கூடி ஆராய்ந்தனர். தமிழ்க் கட்சிகள் முன்வைத்த […]

முடிவுக்கு வருகின்றது ஈழம் பிக்பொஸ்?

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களின் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் இன்று (14) ஐந்தாவது நாளாக நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஐந்து கட்சிகள் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்கப்படவுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் […]