முல்லைத்தீவு கடற்கரையில் தமிழீழத் தேசியக் கொடி!

முல்லைத்தீவு செல்வபுரம் கடற்கரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியக் கொடி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எமது முல்லைத்தீவுச் செய்தியாளர் கூறுகின்றார். குறித்த தேசியக் கொடி புத்தம்புதியதாய் உள்ளதுடன் கடலிலிருந்து மிதந்துவந்து கரையொதுங்கிய நிலையில் மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் ஸ்தலத்துக்கு வந்த பொலிஸார் அதனை மீட்டுச் சென்றதாக எமது செய்தியாளர் மேலும் கூறுகின்றார். இதேவேளை இதுதொடர்பான விசாரணைகளில் தாம் ஈடுபடுள்ளதாக கூறும் முல்லைத்தீவு பொலிஸார் சம்பவம் தொடர்பில் யாரையும் இன்னும் கைதுசெய்யவில்லை […]

தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் – ஜ.நாவிடம் மனு

தமிழ் ஈழ தனிநாடு அமைக்க ஈழத்தமிழர்களிடமும் புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் மனு