சிறிலங்காவின் முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் றொஷான் குணதிலகவும், கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவும், பீல்ட் மார்ஷலாகப் பதவி உயர்த்தப்படவுள்ளதாக சிறிலங்கா அதிபர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கில் சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, விசாரணைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அவருக்கு பீல்ட் மார்ஷல் பதவி வழங்க ஜனாதிபதி முன்னிற்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படைத்துறைப் பதவிகளில் மிக உயரியதாக மதிக்கப்படும் […]
Category: செய்திகள்
அநீதிகளை வெளிக்கொணர முயற்சித்தவர்களே படுகொலை செய்யப்பட்டனர் – கஜேந்திரகுமார்
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்ற அநீதிகளை வெளிக்கொணர முயற்சித்தமையினாலேயே ஊடவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் படுகொலைக்கு நீதிகோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலையில் கடந்த 2006ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13வது ஆண்டு நினைவுதினம் இன்று (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில், படுகொலைசெய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த கவனயீர்ப்பு […]
வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்பு
மன்னார் சௌத்பார் பிரதான வீதி , சாந்திபுரம் உப்பளம் பகுதியில் வயோதிபர் ஒருவருடைய சடலத்தினை மன்னார் பொலிஸார் இன்று சனிக்கிழமை காலை (26) மீட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் மன்னார் பனங்கட்டிக்கோட்டு கிராமத்தை வதிவிடமாக கொண்ட கதிர்காமநாதன் அருளானந்தன் (வயது-82) என அவரது மகனால் அடையாலம் காணப்பட்டுள்ளார். குறித்த வயோதிபர் நேற்று வெள்ளிக்கிழமை(25) இரவு வீட்டிலிருந்து சென்ற நிலையிலே இன்று சனிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டார். அப்பகுதியால் சென்றவர்கள் சடலத்தை கண்டு மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையிலே […]
தமிழர்களை தொடர்ந்தும் கையேந்த வைப்பதுதான் அரசின் திட்டமா? சிறீதரன்
தமிழர்களை தொடர்ந்தும் கையேந்தும் நிலையில் வைத்திருப்பது தான் இந்த அரசாங்கத்தின் விருப்பமா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கடன் இணக்க திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”யுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகப் போகின்றது. எனினும், பெரும்போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொழில் வழங்கக்கூடிய தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கான வல்லமை அரசாங்கத்திற்கு இல்லை. ஏற்கனவே […]
முல்லையில் புத்தர் சிலை பொலிஸாரின் பாதுகாப்புடன் திறந்துவைப்பு!
நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோவிலுக்கு கடந்த 14 ஆம் திகதி அன்று அப்பகுதித் தமிழ் மக்கள் பொங்கல் வழிபாடுகளுக்காக சென்றவேளை அப்பகுதியில் குடியிருக்கும் பௌத்த துறவிக்கும் மக்களுக்குமிடையில் முறுகல் ஏற்பட்டிருந்தது. நாயாறு நீராவியடிப்பிள்ளையார் கோவில் வளாகப் புத்தர்சிலை பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினரின் உதவியுடன் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த முறுகல் நிலை தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்தவகையில் எதிர்வரும் 29 ஆம் திகதி வழக்கிற்கு வருமாறு முரண்பாடுகளில் ஈடுபட்டவர்களை நீதிமன்றம் […]
பிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு
சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, பிரித்தானியாவின் பொதுக் கட்டளைச் சட்டத்தை மீறி குற்றமிழைத்துள்ளார் என்று பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் மஜிஸ்ரேட் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அத்துடன் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணையையும் பிரித்தானிய நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு பெப்ரவரி 4ஆம் நாள் சிறிலங்காவின் சுதந்திர நாளன்று, லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு வெளியே புலம்பெயர் தமிழர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அப்போது, சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராப் பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, வெளியே வந்து, […]
கோத்தாவின் வழக்கு நடந்துவரும் நிலையில் நீதிமன்ற வளாகத்தில் அதிரடிப்படையினர் குவிப்பு
கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கொழும்பு சிறப்பு மேல்நீதிமன்ற வளாகத்தில் அளவுக்கு அதிகமான அதிரடிப்படையினர் காணப்பட்டமைக்கு, சட்டமா அதிபர் தரப்பில் முன்னிலையான பிரதி சொலிசிற்றர் ஜெனரல் திலீபா பீரிஸ் எதிர்ப்புத் தெரிவித்தார். டி.ஏ.ராஜபக்ச நினைவிடம் அமைத்ததில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பாக, கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு நேற்று கொழும்பு சிறப்பு மேல்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் கோத்தாபய ராஜபக்ச முன்னிலையாகியிருந்தார். இதன் போது அளவுக்கு அதிகமான சிறிலங்கா சிறப்பு […]
முன்னாள் போராளி சேரன் காலமானார்!
தமிழீழ விடுதலைப் புலிகளின்முன்னாள் போராளி சேரன் அவர்கள் புலம்பெயர் தேசமான லண்டனில் சுகவீனம் காரணமாக 21-01-2019 அன்று காலமானார். தாயக மண் விடிவிற்காகத் தன்னை அர்ப்பணித்துப் பல களங்கள் களமாடி போரின் பின் பல சவால்களை எதிர் கொண்டு தேசியத்தின் விடிவிற்கு அயராது உறுதியோடு பயணித்த போராளி.
ஐ.நா படைக்கு அழைப்பு அனுப்பிய சிவாஜி
தென்னிலங்கையில் நடந்த அரசியல் குழப்பத்தை சாட்டாக வைத்துக் கொண்டு எங்களுக்கு அடிப்பார்கள் என்ற அச்சமுமிருந்தது. தமிழ்மக்களின் கடைகளை கொளுத்தி அடித்தார்களாயின் என்ன செய்வது? இதனால் தான் நான் அமெரிக்காவிடம் உடனடியாக சமாதானப் படையை இலங்கைக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்தேன் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். “ஒக்ரோபர்-26 இல் நிகழ்ந்த அரசியல் மாற்றமும் அதன் பின்னரான எதிர்பார்ப்புக்களும்” எனும் தலைப்பிலான விசேட கருத்தரங்கு நிகழ்வு திங்கட்கிழமை(21) […]
போராளிகள் இருவருக்கு 25 வருட சிறை
வில்பத்து சரணாலயத்தில், 8 படையினரைக் கொன்றார்கள் எனக் குற்றம் சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் இருவருக்கு 25 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007 மார்ச் 9ஆம் திகதி, வில்பத்து சரணாலயத்தில் பாதுகாப்பு சோதனைக்காகச் சென்றிருந்த கஜபா படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் ஜெயந்த சுரவீர மற்றும் 7 படையினர், விடுதலைப் புலிகளின் தாக்குதலில் மரணமாகினர். இந்தத் தாக்குதலில் பங்கேற்றவர்கள் எனப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் இருவர் கைதுசெய்யப்பட்டு அனுராதபுர மேல்நீதிமன்றத்தில் வழக்குத் […]
பளையில் முன்னாள் போராளி கைது
பளை – கரந்தாய் பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர், பயங்கரவாத விசாரணைப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம், கரந்தாய் பகுதியில் உள்ள முன்னாள் போராளியில் வீட்டைச் சோதனைக்குட்படுத்திய பயங்கரவாத விசாரணைப் பிரிவு காவல்துறையினர், அங்கிருந்து கைத்துப்பாக்கி ஒன்று, கட்டுத்துவக்கு ஒன்று, 150 ரவைகளைக் கைப்பற்றினர் என்று கூறப்படுகிறது. இதையடுத்தே, 40 வயதுடைய, முன்னாள் போராளியான சுமன் கைது செய்யப்பட்டு வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இவர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவராவார்.
ஜநாவை ஏமாற்றவே அரசின் நாடகம்?
பயங்கரவாத தடைச் சட்ட நீக்கம், அரசியல் கைதிகள் விடுதலை, பொது மக்கள் காணிகள் விடுவிப்பு, படையினரை வடக்கில் இருந்து நீக்குதல் என்று எத்தனையோ விடயங்களை இரணிலுக்கு உதவி தருவதற்கு முன் நிபந்தனையாக இட்டு சாதித்திருக்கலாம். இப்பொழுது யானைக்கு அடிசறுக்கியுள்ளது. அகங்காரத்திற்கு அடி கொடுக்கப்பட்டுள்ளது. சாணக்கியம் சறுக்கிப் போயுள்ளதென தெரிவித்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன். பௌத்தத்திற்கு முதலிடம் கொடுக்கும், ஏக்கிய இராஜ்ய பதம் கொண்ட, வடகிழக்கு இணைப்பற்ற, சமஷ்டி அற்ற, புதிய அரசியல் அமைப்பின் வரைவு பற்றி அவர் […]












