கடும் குளிரிலும் கொட்டொலி முழங்க ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு

நேற்றைய தினம் சிறிலங்காவின் சுதந்திர தினம் , ஈழத்தமிழர்களின் கரிநாள் அன்று சிங்கள பேரினவாத அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவும் , தமிழின அழிப்பிற்கான பன்னாட்டு சுயாதீன விசாரணையை வலியுறுத்தவும் நடைபெற இருக்கும் 46 வது ஐநா மனிதவுரிமை பேரவை கூட்டத்தொடரில் யேர்மன் அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் எனும் கோரிக்கையுடன் , நூற்றுக்கணக்கான மக்கள் யேர்மன் தலைநகரில் உள்ளே வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக அணிதிரண்டு போராடினர். தமிழீழ மண்ணின் விடிவிற்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த […]

டென்மார்கில் பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் வார நிகழ்வு!

தமது இனிய உயிர் அர்ப்பணிப்பால் தனியரசிற்கு வித்திட்டு ,உரமிட்ட மாவீரர்களை நினைவு கூறும் புனித மாவீரர் வார நிகழ்வு Aarhus பல்கலைக்கழக மாணவர்களால் நான்காவது தடவையாக 20.11.19 அன்று மிகவும் உணர்வு பூர்வமாக நடாத்தப்பட்டது . முதல் நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழீழத்தேசியக்கொடியேற்றல், ஈகச்சுடர் ஏற்றல், அகவணக்கம் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து துயிலுமில்லப்பாடல் ஒலிக்கப்பட்டு அதன் பின்பு மாணவர்களால் மலர்வணக்கம் உணர்வுபூர்வமாக செலுத்தப்பட்டது. மாவீரர் வார நிகழ்வில் எழுச்சி உரை,எழுச்சி நடனம்,கவிதை, பாட்டுகள் என்பன […]

பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்

தமிழ்த் தேசிய இனத்தின் ஆணிவேராகிய எமது தேசியத்தலைவரையும் அவரின் தலைமையிலான எமது விடுதலைப்போராட்டத்தையும் அதன் இறுதி இலக்காகிய சுதந்திர தமிழீழத்தையும் இழிவுபடுத்தி, பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (British Broadcasting Cooperation – BBC) தமிழ்ப்பிரிவானது, 18 – 05 – 2019 அன்று, அதாவது எமது இனவழிப்பின் 10 வருட, கொடுந்துயரம் நிகழ்த்தப்பட்ட அதே நாளில், திட்டமிட்டபடி வலிந்து, உண்மைக்குப் புறம்பான மற்றும் வரலாற்றை திரிபுபடுத்தக்கூடிய இரண்டு காணொளிகளை, தமது முகப்புத்தகத்தில் (BBC News தமிழ்) வெளியிட்டிருந்தார்கள். […]

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பெரும் திருப்பங்கள் நிறைந்த சமர்களில் வீரகாவியம் படைத்து தங்களை ஆகுதியாக்கிய அனைத்து மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வானது 19.05.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வலே மாநிலத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் […]

பிரான்சு லாச்சப்பலில் பேரெழுச்சிகொண்ட முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு!

மே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் பேரணி நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உபகட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று (18.05.2019) சனிக்கிழமை பேரெழுச்சியுடன் இடம்பெற்றது. பிற்பகல் 15.00 மணியளவில் பேரணி பாரிசு லாச்சப்பல் பகுதியில் இருந்து ஆரம்பமாகி பல்லின சமூகத்தினரும் பார்த்திருக்க தமிழீழ மக்களுக்கு இடம்பெற்ற அவலங்கள் அடங்கிய பதாதைகள் கருத்துப்படங்களுடனும் தமிழீழத் தேசியக்கொடிகளைத் தாங்கியபடி அணிவகுத்துச்சென்று லாச்சப்பல் பகுதியில் உள்ள திடலைச் […]

யேர்மனியில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நிகழ்வு-2019

யேர்மனி டுசில்டோர்வ் நகரில் மே 18 அன்று தமிழின அழிப்புநாள் 2019 மிகச்சிறப்பாக நடைபெற்றது. டுசில்டோர்வ் நகரத்தின் புகையிரதநிலயத்திற்கு முன்புறமாக உள்ள வீதியில் கறுப்பு உடைகள் அணிந்து அணிதிரண்ட மக்கள். கறுப்பு நிற பலூன்களில் இன அழிப்பு சம்பந்தமமான கோசங்களை எழுதி ஒவ்வொருவரும் தங்களின் கைகளில் ஏந்தியபடியும், பாதாதைகளையும் ஏந்தியபடியும் ஊர்வலமாக இம் மாநிலத்தின் பாராளுமன்றம் நோக்கிப் புறப்பட்டனர். ஆயிரக்கணக்கில் கோசங்களை எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்ற மக்கள் இரண்டரை மணித்தியாலங்களின் பின்பு டுசில்டோர்வ் பாராளுமன்றத்தை வந்தடைந்தனர். அத்திடலில் […]

எதிர்வரும் நாட்களை தாயக மக்கள் துயர்துடைப்பு வாரமாக கடைப்பிடிப்போம் – யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

கடந்த நாட்களாக எமது தாயகத்தில் சீரற்ற காலநிலையால் தொடரும் அடைமழை காரணமாக எமது தேசத்தில் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளது.ஆயிரக்கணக்கான எம் உறவுகள் எவ்வித உதவிகளும் இன்றி தவிக்கின்றார்கள் . எத்தனையோ மக்கள் ஈர உடுப்புகளால் குளிர்ந்து விறைப்படைந்த நிலையில் உள்ளார்கள் . குறிப்பாக வடக்கில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இப்படியாக தவித்துக்கொண்டு இருக்கும் எம் மக்களுக்கு காலத்தின் தேவை […]

பிரான்சில் பேர் எழுச்சிகொண்டிருந்த மாவீரர் நாள் -2018 நினைவேந்தல் நிகழ்வு!

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் கடந்த 27.11.2018 செவ்வாய்க்கிழமை பாரிசு19 இல் உள்ள PARIS EVENT

ஸ்ராஸ்பூர்க் நகரில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு.

27.11.2018 அன்று ஸ்ராஸ்பூர்க் நகரில் மாவீரர்நாள் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாகவும், எழுச்சியுடனும் நடைபெற்றிருந்தது. மாவீரர் நினைவுகளைச் சுமந்து,

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் வணக்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழீழ மாவீரர் தினம் உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன்

சுவிசில் நடைபெற்ற எழுச்சி வணக்க நிகழ்வு!

தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளினதும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்,