வெடுக்குநாறியில் கைதானவர்களை விடுதலை செய்யக் கோரிப் போராட்டம்

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கோரி இன்றைய தினம் சனிக்கிழமை ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், அங்கிருந்து பேரணியாக வவுனியா மணிக்கூட்டு கோபுர வீதியூடாக வவுனியா நகரை அடைந்து அங்கிருந்து இலுப்பையடியினை சென்றடைந்திருந்தது. இதன்போது தொல்பொருள் திணைக்களத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் அங்கிருந்து பேரணியாக வவுனியா சிறைச்சாலையின் முன்பாக சென்று நிறைவடைந்திருந்தது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘ பொலிஸ் அராஜகம் ஒழிக, வெடுக்குநாறி […]

யாழில் கடற்றொழிலில் ஈடுபட்ட தொழிலாளியை காணவில்லை

யாழில் கடற்றொழிலில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியை சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவர் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் இதுவரை கரை திரும்பாத நிலையில் அவர் சென்ற படகு கரை ஒதுங்கியுள்ளது. இந்நிலையில் காணாமல் போன குறித்த கடற்றொழிலாளரை தேடும் பணியில் மீனவர்களும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர். மருதங்கேணி வடக்கைச் சேர்ந்த 60 வயதுடைய முத்துச்சாமி தவராசா என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாந்தனின் வித்துடல் நாளை வெள்ளிக்கிழமைஎடுத்துவரப்படவுள்ளது!

சென்னையில் உயிரிழந்த சாந்தனின் வித்துடல் நாளை வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்படவுள்ளது. முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அவர் இலங்கை செல்ல இந்திய மத்திய அரசு கடந்த 24ஆம் திகதி அனுமதி அளித்த நிலையில், கல்லீரல் செயலிழப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சாந்தன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், திடீரென்று நேற்றுக் காலை மாரடைப்பு ஏற்பட்டு […]

சுமந்திரனால் முடியாது:தவராசா!

தமிழரசுக்கட்சி தலைமைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் தமிழரசுக் கட்சிக்காக வாதாடுவதற்கு எம்.ஏ.சுமந்திரன் முன்வந்த நிலையில், வழக்கில் சுமந்திரன் சாட்சியாக மட்டுமே முன்னிலையாகமுடியும். தவிர, தமிழரசுக் கட்சிக்காக வாதாடுவது சட்டத்திற்கு முரணானது என மற்றொரு கட்சி பிரமுகரும் சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். அதேவேளை ‘தமிழ் அரசுக்கட்சியை பாதுகாப்பேன் என்று சுமந்திரன் கூறுவது பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுவிக்கும் செயல்’ என்றும்n கே.பி. தவராஜா தெரவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் பொதுக்குழு எடுத்திருந்த தீர்மானங்களுக்கு எதிராகவும், தேசிய பேராளர் […]

கூடி முடிவெடுத்தே ரணிலுக்கு ஆதரவு?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவினை வழங்குவது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது மற்றும் அரசியல் கூட்டணி அமைப்பது குறித்து மாத இறுதியில் தீர்மானிக்கப்படும் எனவும் சிறீதரன் தெரிவித்துள்ளார். அத்துடன் கட்சி பொதுக் கூட்டமொன்றை நடத்தி தீர்க்ககரமான முடிவுகளை எடுக்கவுள்ளதாகவும் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் கொண்டுள்ள திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னர் […]

2009 ஆண்டுக்கு முன்னிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவோம் – சிறீதரன்

2009 ஆண்டுக்கு முன்னர் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு இருந்ததோ அவ்வாறான நிலையை – தமிழ் மக்களின் அரசியல் ஏகப்பிரதிநிதிகள் என்ற நிலையை – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எய்த வேண்டும். எனவே, தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் சகல தமிழ்க் கட்சிகளும் தம் காட்சிகளின் நலனை முன்னிறுத்தாமல் மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ்த் தேசியத்தின் பாதையில் ஓரணியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒன்றிணையுமாறு அழைக்கின்றேன். இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள […]

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை சந்தித்த சிறீதரன்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனிடம் ஆசீவாதம் பெற்றுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை பதவியினை ஏற்றிருந்த நிலையில் சிவஞானம் சிறிதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தனிடம் (22) கொழும்பில் வைத்து ஆசீவாதம் பெற்றுள்ளார். முன்னதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக சிறிதரன் தனது பயணத்தை கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திலிருந்து ஆரம்பித்திருந்தார். “ஈழத்தமிழர்களின் அரசியல் உரித்துக்கோரிய பயணத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் […]

சிங்கள மக்களுக்கு எம்மை பற்றியபோதிய அறிவின்மையே தமிழ் – சிங்கள உறவு மேம்படாமல் இருக்கக் காரணம்! விக்னேஸ்வரன்

என்னை கொலை செய்ய கொலை வெறியில் இருந்த சிங்கள இளைஞன் தன் தவறை உணர்ந்து மனம்மாறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் சுட்டிக் காட்டியுள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கேள்வி பதிலிலேயே இந்த விடயத்தை அவர் தெரிவித்தார். அந்தக் கேள்வி பதிலில், என்னுடைய சில கேள்வி பதில்களை வாசித்துவிட்டு ஒரு படித்த சிங்கள இளைஞர் என்னுடன் தொலைபேசியில் பேசினார். பேச்சு கிட்டதட்ட பின்வருமாறு அமைந்தது. இளைஞர் – ‘சேர்! உங்களைக் கொல்ல வேண்டும் என்ற கொலை வெறியில் இருந்தேன். […]

முல்லையில் துயிலுமில்ல காணி பிடிப்பு!

தமிழ் மக்களிற்கான விடிவினை தந்துவிடப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ள நிலையில் மறுபுறம் காணிபிடிப்புக்கள் பௌத்தமயமாக்கல் என்பவை தளர்வின்றி தொடர்கின்றது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியை தனிநபரிடமிருந்து இராணுவத்துக்கு சுவீகரிப்பதற்கான நில அளவீட்டு பணி வியாழக்கிழமை (18) இடம்பெறவிருந்த நிலையில் அளவீட்டு பணிகள் பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை அரசின் நில அளவை திணைக்கள அதிகாரிகள் நில அளவீட்டு பணிக்காக துயிலும் இல்ல காணிக்கு சென்றபோது அங்கு கூடிய மக்கள் […]

சமூக ஊடகங்கள் ஊடாக பெண்களை ஏமாற்றிய நைஜீரிய பிரஜைகள் கைது!

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பெண்களை ஏமாற்றி பணத்தை மோசடி செய்த வெளிநாட்டுப் பிரஜைகள் இருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் நைஜீரிய பிரஜைகள் என காவற்துறையினர் தெரிவித்தனர். மேலும் இருவருக்கும் கடவுச்சீட்டு இல்லை என்றும், கடவுச்சீட்டுகள் நீதிமன்ற வசம் இருப்பதும் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பண மோசடிகள் தொடர்பில் காவற்துறையினரிடம் 3 முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், 3 முறைப்பாடுகளும் பெண்களால் செய்யப்பட்டுள்ளன. 19.01.2023 அன்று 1,045,000 ரூபாவும், 07.03.2023 அன்று 10,222,634 ரூபாயும், 06.07.2023 […]

மோதலை தவிருங்கள் – சிறீதரன்

இலங்கைத் தமிழரசு கட்சிக்கான தலைமைத்துவ உள்ளக தேர்தல் எதிர்வரும் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் கட்சிக்குள் போட்டியிடுகின்ற எம்.ஏ.சுமந்திரன் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரை பற்றிய தவறான பதிவுகளை அல்லது பின்னூட்டங்களையோ அன்றி விவாதங்களையோ சமூக வலைத்தளங்களிலும் பொது வெளிகளிலும் மேற்கொள்ளக்கூடாது என தலைமைக்கு போட்டியிடுகின்ற சி.சிறீதரன் அறிவித்துள்ளார். இன்று மாவட்டத்தின் சகல கட்சி அங்கத்தவர்களுக்கும் இறுக்கமான பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எக்காரணம் கொண்டும் உள்ளக தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சியினுடைய உறுப்பினர்கள் மீது எதிராகவோ அன்றி வஞ்சனை […]

ஈழத் தமிழர்களை ஆழமாக நேசித்த விஜயகாந்த் அவர்களது மறைவு ஈழத் தமிழ் மக்களுக்குப் பேரிழப்பு..!

தமிழ் திரைத்துறையில் 40 ஆண்டுகளாக முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவரும், தமிழக தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும் முன்னைநாள் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான பெருமதிப்பிற்குரிய விஜயகாந் அவர்கள் – சுகயீனம் காரணமாக மறைந்த செய்தி உலகத் தமிழர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் மீதும், தேசியத் தலைமை மீதும் மிகுந்த அன்பும் – மரியாதையும் – பற்றும் கொண்டு, தனது இறுதிக்காலம் வரை விஜயகாந்த் அவர்கள் வாழ்ந்திருந்தார். ஈழத்தமிழர்கள் மட்டுமன்றி உலகத்தமிழர்களின் மனங்களிலும் […]