வெடுக்குநாறியில் கைதானவர்களை விடுதலை செய்யக் கோரிப் போராட்டம்

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கோரி இன்றைய தினம் சனிக்கிழமை ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், அங்கிருந்து பேரணியாக வவுனியா மணிக்கூட்டு கோபுர வீதியூடாக வவுனியா நகரை அடைந்து அங்கிருந்து இலுப்பையடியினை சென்றடைந்திருந்தது. இதன்போது தொல்பொருள் திணைக்களத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் அங்கிருந்து பேரணியாக வவுனியா சிறைச்சாலையின் முன்பாக சென்று நிறைவடைந்திருந்தது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘ பொலிஸ் அராஜகம் ஒழிக, வெடுக்குநாறி […]