பளை வண்ணான்கேணி பகுதியை சேர்ந்த திருநாமம் சிறிதரன் காந்தன் எனும் குடும்பஸ்தர் தாக்கப்பட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்……… அருள்தாஸ் சனிஸ்ரன் எனும் புலோப்பளை பகுதியை சேர்ந்த இளைஞர் தனது சமூக வலைத்தளங்கள் ஊடாக தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளை மீள உருவாக்க முயற்சிப்பதாக விசாரணைக்கான அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது குறித்த புலோப்பளை பகுதியை சேர்ந்த இளைஞரும் , காயங்களுக்குள்ளான வண்ணான்கேணி பகுதியை சேர்ந்த […]
Category: செய்திகள்
சுமந்திரன் படம் காட்டவேண்டாம்:சிவாஜி!
உள்ளுராட்சி தேர்தலில் வெற்றிபெற தமிழரசுக்கட்சியை சார்ந்த ஒருசில ஆதாரவாளர்கள் மதுபானம் வழங்கினார்கள். ஆனால் தமிழரசுக் கட்சி தலைமைப்பீடம் அதனை செய்யுமாறு கோரியிருக்காது. எங்களுக்கு அது நன்கு தெரியும்.நான் கூறிய கருத்துக்கள் யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக எனது மனவருத்தத்தை தெரிவிக்க கடமைபட்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார் சிவாஜிலிங்கம். யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் வல்வெட்டித்துறை நகரசபையில் நான் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டால் நான்கு வருடங்களும் தவிசாளராக இருக்கப்போவதில்லை. தவிசாளர் பதவி உட்பட அனைத்து உறுப்பினர்களையும் சுழற்சி […]
தமிழரசுக் கட்சி தோற்கடிக்கப்பட வேண்டும் – கஜேந்திகுமார்
தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியானது எம்.ஏ.சுமந்திரன் பொதுச்செயலாளராக வந்த பின்புதான் நிராகரிக்கப்பட்டதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் 19 தமிழ் உறுப்பினர்கள் உள்ள போதும் 10 உறுப்பினர்களைக்கொண்ட அறுதிப்பெரும்பாண்மை ஒருவருக்கும் இல்லை. தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளை முன்னெடுத்த போதும் அது சாத்தியப்படவில்லை. தமிழரசு பதில் தலைவர் சீ.வி.கே. சிவஞானத்துடன் பேசிய போது தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிக்கு குழு அமைப்பதாக சொல்லியிருந்தார். அதன் பின்பு எம்.ஏ.சுமந்திரன் பொதுச்செயலாளராக வந்த பின்பு குழு அமைக்கும் விடயம் தேவையில்லை […]
யோஷித ராஜபக்ஷ கைது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ இன்றைய தினம் சனிக்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக யோஷித ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. தற்போது தொடரப்பட்டுள்ள இந்த காணி வழக்கின் பிரதான […]
தமிழ் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க உத்தேசம்
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைவு குறித்து தமிழ்த்தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கு உத்தேசித்திருப்பதாகவும், எதிர்வரும் 7 ஆம் திகதி சிறிதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் கலந்துரையாடி அச்சந்திப்புக்குரிய திகதியைத் தீர்மானிக்கவிருப்பதாகவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து எதிர்வருங்காலத்தில் அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படும்போது, குறைந்தபட்சம் அவ்விடயத்தில் மாத்திரமேனும் தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படவேண்டும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்த தமிழ்த்தேசிய மக்கள் […]
சுடலை ஞானம்:கூட்டுக்கு தயாராகும் கூட்டணி!
நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தல் தந்திருந்த பாடத்தின் தொடர்ச்சியாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் ஏனைய தமிழ் கட்சிகளையும் இணைத்து செயற்படுவதற்கு கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கடந்த பொது தேர்தலில் போட்டியிட்ட சிறிநேசன் தலைமையிலான அணி மற்றும் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்ட அணியினர், ரெலோ கட்சியினர் என பல்வேறு அமைப்பினரையும் இணைத்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்டியெழுப்புவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் சில அணியினரை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்குள் உள்வாங்கும்போது தற்போது இணைந்து செயற்படுகின்ற […]
திருந்தியதா? தமிழ் தரப்பு :சமஸ்டிக்கு முயற்சி!
இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு தயாரிப்பில் ஒற்றையாட்சியை நிராகரித்து சமஸ்டி அடிப்படையிலான ஆட்சி முறைமைக்கு புதிய அரசாங்கத்தை வற்புறுத்துவது தொடர்பில் வடக்கிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தின்போது, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில், 2016ஆம் ஆண்டு தமிழ் வெகுஜன அமைப்புகளை உள்ளடக்கிய தமிழ் மக்கள் பேரவை முன்வைத்த முன்மொழிவுகளை அடிப்படையாக கொண்டு பேச்சுக்களை முன்னெடுப்பதே, பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நோக்கமாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது […]
தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூடியது: கூட்டத்திற்கு முன்னரே வாக்குவாதம்!
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று சனிக்கிழமை (14) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியது. தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கூட்டத்தில் செயலாளர் ப.சத்தியலிங்கம், சி.வி.கே.சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், இரா.சாணக்கியன், து.ரவிகரன், க.கோடீஸ்வரன், ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சீ.யோகேஸ்வரன், சி.சிவமோகன், சாந்தி சிறிஸ் கந்தராஜா, த.கலையரசன், ஞா.சிறிநேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். நடைபெற்று […]
மட்டக்களப்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட ஊத்துச்சேனை கிராமத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று வியாழக்கிழமை (12) இரவு இடம்பெற்றுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டவரின் மனைவியின் சகோதரனால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மட்டக்களப்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் […]
தமிழ்த்தேசியக் கட்சிகள், சிவில் சமூகத்தை இணைத்து அரசியல் தீர்வு குறித்துப் பேச உத்தேசம் : கஜேந்திரகுமார்
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தை மையப்படுத்தி எதிர்வரும் ஆண்டின் தொடக்கத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும், வெகுவிரைவில் அதற்குரிய திகதியைத் தீர்மானிப்பதற்கும் தமிழ்த்தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன. அண்மையில் நடைபெற்றுமுடிந்த பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து, இனிவருங்காலங்களிலேனும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி ஒன்றுபட்டுப் பயணிக்கவேண்டும் என்ற விடயம் பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டுவருகின்றது. குறிப்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக ஏற்கனவே கடந்த 2015 – […]
மஹிந்தவின் 116 பாதுகாவலர்கள் நீக்கம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன கொள்கை மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவினருக்கு நேற்று (10) வழங்கிய கடிதம் மூலம் பிரதி பொலிஸ் மா அதிபர் (மனித வள முகாமையாளர்) அறிவித்துள்ளதாக சட்டத்தரணி ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். இதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக […]
அவசர சிகிச்சைப்பிரிவில் சிவாஜிலிஙம்!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுயநினைவிழந்த நிலையில் கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த இரு தினங்களாக சுயநினைவிழத்த நிலையில் கொள்ளுப்பிட்டி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் தொடர்ந்தும் அபாயகரமான கட்டத்திலேயே உள்ளதாக கூறப்படுகின்றது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பின்னராக கடுமையாக நோய்வாய்ப்பட்ட நிலையில் சிவாஜிலிங்கம் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.