தனக்கு எதுவுமே தெரியாதென்கிறார் கோத்தா!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் இலங்கை காவல்துறை மற்றும் நீதி துறையே பொறுப்புக்கூறவேண்டுமென முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய குற்றஞ்சுமத்தியுள்ளார். கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் குற்றச்சாட்டுகளுக்கு காரசாரமான மறுப்புத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கர்தினால் ரஞ்சித் பயங்கரவாதத் தாக்குதல்களில் உண்மையில் ஈடுபட்ட இரு தரப்பினரின் பொறுப்பை மறைக்கிறார் அல்லது வெளிப்படையாக அவர்களை விடுவிக்கிறார் என்று தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக கர்தினால் ரஞ்சித் அவர்கள் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பின்வரும் குற்றச்சாட்டுகளை […]

வெடுக்குநாறியில் கைதானவர்களை விடுதலை செய்யக் கோரிப் போராட்டம்

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கோரி இன்றைய தினம் சனிக்கிழமை ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், அங்கிருந்து பேரணியாக வவுனியா மணிக்கூட்டு கோபுர வீதியூடாக வவுனியா நகரை அடைந்து அங்கிருந்து இலுப்பையடியினை சென்றடைந்திருந்தது. இதன்போது தொல்பொருள் திணைக்களத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் அங்கிருந்து பேரணியாக வவுனியா சிறைச்சாலையின் முன்பாக சென்று நிறைவடைந்திருந்தது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘ பொலிஸ் அராஜகம் ஒழிக, வெடுக்குநாறி […]

சாந்தனின் வித்துடல் நாளை வெள்ளிக்கிழமைஎடுத்துவரப்படவுள்ளது!

சென்னையில் உயிரிழந்த சாந்தனின் வித்துடல் நாளை வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்படவுள்ளது. முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அவர் இலங்கை செல்ல இந்திய மத்திய அரசு கடந்த 24ஆம் திகதி அனுமதி அளித்த நிலையில், கல்லீரல் செயலிழப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சாந்தன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், திடீரென்று நேற்றுக் காலை மாரடைப்பு ஏற்பட்டு […]

சுமந்திரனால் முடியாது:தவராசா!

தமிழரசுக்கட்சி தலைமைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் தமிழரசுக் கட்சிக்காக வாதாடுவதற்கு எம்.ஏ.சுமந்திரன் முன்வந்த நிலையில், வழக்கில் சுமந்திரன் சாட்சியாக மட்டுமே முன்னிலையாகமுடியும். தவிர, தமிழரசுக் கட்சிக்காக வாதாடுவது சட்டத்திற்கு முரணானது என மற்றொரு கட்சி பிரமுகரும் சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். அதேவேளை ‘தமிழ் அரசுக்கட்சியை பாதுகாப்பேன் என்று சுமந்திரன் கூறுவது பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுவிக்கும் செயல்’ என்றும்n கே.பி. தவராஜா தெரவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் பொதுக்குழு எடுத்திருந்த தீர்மானங்களுக்கு எதிராகவும், தேசிய பேராளர் […]

கூடி முடிவெடுத்தே ரணிலுக்கு ஆதரவு?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவினை வழங்குவது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது மற்றும் அரசியல் கூட்டணி அமைப்பது குறித்து மாத இறுதியில் தீர்மானிக்கப்படும் எனவும் சிறீதரன் தெரிவித்துள்ளார். அத்துடன் கட்சி பொதுக் கூட்டமொன்றை நடத்தி தீர்க்ககரமான முடிவுகளை எடுக்கவுள்ளதாகவும் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் கொண்டுள்ள திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னர் […]

இந்திய உயர்ஸ்தானிகரை கூட்டாக சந்தித்த தமிழ் தரப்பு!

இந்திய தூதரக அழைப்பினையடுத்து தமிழ் தேசிய கட்சிகள் இலங்கைக்கான இந்திய தூதுவரை கொழும்பில் இன்று திங்கட்கிழமை (22) சந்தித்துள்ளன. சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், சிறீதரன், சுமந்திரன், கோவிந்தம் கருணாகரம், சாணக்கியன், சார்ள்ஸ் நிர்மலநாதன், விநோநோகராதலிங்கம், மற்றும் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். சந்திப்பில் தமிழர் பகுதியில் தொடரும் திட்டமிட்ட பௌத்த ஆக்கிரமிப்பு, மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமை, அதிகாரம் பகிரப்படாமை, போன்ற […]

சிங்கள மக்களுக்கு எம்மை பற்றியபோதிய அறிவின்மையே தமிழ் – சிங்கள உறவு மேம்படாமல் இருக்கக் காரணம்! விக்னேஸ்வரன்

என்னை கொலை செய்ய கொலை வெறியில் இருந்த சிங்கள இளைஞன் தன் தவறை உணர்ந்து மனம்மாறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் சுட்டிக் காட்டியுள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கேள்வி பதிலிலேயே இந்த விடயத்தை அவர் தெரிவித்தார். அந்தக் கேள்வி பதிலில், என்னுடைய சில கேள்வி பதில்களை வாசித்துவிட்டு ஒரு படித்த சிங்கள இளைஞர் என்னுடன் தொலைபேசியில் பேசினார். பேச்சு கிட்டதட்ட பின்வருமாறு அமைந்தது. இளைஞர் – ‘சேர்! உங்களைக் கொல்ல வேண்டும் என்ற கொலை வெறியில் இருந்தேன். […]

முல்லையில் துயிலுமில்ல காணி பிடிப்பு!

தமிழ் மக்களிற்கான விடிவினை தந்துவிடப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ள நிலையில் மறுபுறம் காணிபிடிப்புக்கள் பௌத்தமயமாக்கல் என்பவை தளர்வின்றி தொடர்கின்றது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியை தனிநபரிடமிருந்து இராணுவத்துக்கு சுவீகரிப்பதற்கான நில அளவீட்டு பணி வியாழக்கிழமை (18) இடம்பெறவிருந்த நிலையில் அளவீட்டு பணிகள் பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை அரசின் நில அளவை திணைக்கள அதிகாரிகள் நில அளவீட்டு பணிக்காக துயிலும் இல்ல காணிக்கு சென்றபோது அங்கு கூடிய மக்கள் […]

தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையில் 50ஆவது ஆண்டு நினைவேந்தல்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் பொலிஸாருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் , மின்சார கம்பி பொதுமக்களின் கூட்டத்தில் அறுந்து […]

யாழில் ரணிலின் வருக்கைக்கு எதிர்ப்பு!!

யாழ்ப்பாணத்திற்கு பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவுக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் பழைய பூங்கா அருகில் இப் போராட்டம் இடம்பெற்றது. பழைய பூங்கா அருகில் காவல்துறையினர் வீதித் தடைகளை அமைத்து போராட்டகாரர்களைத் தடுத்தனர். இதேவேளை ரணிலின் யாழ் பயணத்தை முன்னிட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ். மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள பகுதிகள் வீதிகளில் வீதித்தடைகள் போடப்பட்டுள்ளதோடு, அப்பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் கலகமடக்கும் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை […]

சமூக ஊடகங்கள் ஊடாக பெண்களை ஏமாற்றிய நைஜீரிய பிரஜைகள் கைது!

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பெண்களை ஏமாற்றி பணத்தை மோசடி செய்த வெளிநாட்டுப் பிரஜைகள் இருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் நைஜீரிய பிரஜைகள் என காவற்துறையினர் தெரிவித்தனர். மேலும் இருவருக்கும் கடவுச்சீட்டு இல்லை என்றும், கடவுச்சீட்டுகள் நீதிமன்ற வசம் இருப்பதும் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பண மோசடிகள் தொடர்பில் காவற்துறையினரிடம் 3 முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், 3 முறைப்பாடுகளும் பெண்களால் செய்யப்பட்டுள்ளன. 19.01.2023 அன்று 1,045,000 ரூபாவும், 07.03.2023 அன்று 10,222,634 ரூபாயும், 06.07.2023 […]

யாழில் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிர்மாய்ப்பு !

யாழ்ப்பாணத்தில் தந்தை தனக்கு பணம் கொடுக்காததால் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (29.12.2023) இடம்பெற்றுள்ளது. இதன்போது செல்வச்சந்நிதி கோவில் வீதி, கதிரிப்பாய், அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞனின் தந்தை அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் நிலையில் இளைஞன் தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி பயில்வதற்காக தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். தந்தை தனக்கு பணம் கொடுக்க மறுத்த காரணத்தால் நேற்றையதினம் (29) குறித்த இளைஞன் வீட்டில் தவறான […]