யாழில் கடற்றொழிலில் ஈடுபட்ட தொழிலாளியை காணவில்லை

யாழில் கடற்றொழிலில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியை சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவர் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் இதுவரை கரை திரும்பாத நிலையில் அவர் சென்ற படகு கரை ஒதுங்கியுள்ளது. இந்நிலையில் காணாமல் போன குறித்த கடற்றொழிலாளரை தேடும் பணியில் மீனவர்களும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர். மருதங்கேணி வடக்கைச் சேர்ந்த 60 வயதுடைய முத்துச்சாமி தவராசா என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2009 ஆண்டுக்கு முன்னிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவோம் – சிறீதரன்

2009 ஆண்டுக்கு முன்னர் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு இருந்ததோ அவ்வாறான நிலையை – தமிழ் மக்களின் அரசியல் ஏகப்பிரதிநிதிகள் என்ற நிலையை – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எய்த வேண்டும். எனவே, தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் சகல தமிழ்க் கட்சிகளும் தம் காட்சிகளின் நலனை முன்னிறுத்தாமல் மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ்த் தேசியத்தின் பாதையில் ஓரணியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒன்றிணையுமாறு அழைக்கின்றேன். இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள […]

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை சந்தித்த சிறீதரன்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனிடம் ஆசீவாதம் பெற்றுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை பதவியினை ஏற்றிருந்த நிலையில் சிவஞானம் சிறிதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தனிடம் (22) கொழும்பில் வைத்து ஆசீவாதம் பெற்றுள்ளார். முன்னதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக சிறிதரன் தனது பயணத்தை கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திலிருந்து ஆரம்பித்திருந்தார். “ஈழத்தமிழர்களின் அரசியல் உரித்துக்கோரிய பயணத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் […]