சுடலை ஞானம்:கூட்டுக்கு தயாராகும் கூட்டணி!

நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தல் தந்திருந்த பாடத்தின் தொடர்ச்சியாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் ஏனைய தமிழ் கட்சிகளையும் இணைத்து செயற்படுவதற்கு கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடந்த பொது தேர்தலில் போட்டியிட்ட சிறிநேசன் தலைமையிலான அணி மற்றும் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்ட அணியினர், ரெலோ கட்சியினர் என பல்வேறு அமைப்பினரையும் இணைத்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்டியெழுப்புவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் சில அணியினரை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்குள் உள்வாங்கும்போது தற்போது இணைந்து செயற்படுகின்ற கட்சிகளுக்கு ஆட்சேபனைகள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் வெளியேறுவது தொடர்பில் தாம் கரிசனை கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தமது கூட்டணியை பொறுத்தவரை அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைப்பதும் அதன் ஊடாக தமிழ் மக்களுக்கான அரசியல் கட்சியாக பரிணமிப்பதுமே நோக்கம் எனவும் தொடர்புடைய தரப்புக்கள்; சுட்டிக்காட்டியுள்ளன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்