மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பாரதி வீதியில் உள்ள மயானத்தில் சீயோன் தேவாலய தற்கொலைதாரியின் உடலைப் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் எதிர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். குறித்த பகுதியில் இன்று (சனிக்கிழமை) காலை சீயோன் தேவாலய தற்கொலைதாரியின் உடலைப் புதைப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அப்பகுதியில் ஒன்றுகூடிய பிரதேச மக்கள் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர். வீதிகளில் டயர்களை எரித்தும் வீதிகளை மறித்தும் நடைபெற்ற இந்த போராட்டத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டது. கடந்த […]
Author: இலக்கியன்
பிரபாகரனுக்கு நிகர் அவரே – ரவூப் ஹக்கீம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிகர் அவரே ஆவார். இலங்கையில் இனிமேல் எவரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது. பிரபாகரனுடன் இஸ்லாமியப் பயங்கரவாதிகளை ஒப்பிடுவது அறிவீனம். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன முஸ்லிம்களின் மத்தியிலிருந்து பிரபாகரன் உருவாக இடமளிக்க வேண்டாம் எனத் தெரிவித்திருப்பது அபத்தமான ஒன்று. இவ்வாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழீழ விடுதலைப்புலிகளின் […]
கொழும்பில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரு பிள்ளைகளும் உயிரிழப்பு!
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று மாலை 6.20 மணியளவில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சன்ஹில் ஹோட்டலுக்கு அருகில் உள்ள புகையிரத பாதையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து அளுத்கம நோக்கிச் சென்ற ரயிலுடனேயே குறித்த மூவரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தேசிய நிர்வாகிகள் – ஆனந்த சங்கரி
விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தேசிய நிர்வாகிகளாக இருந்தனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அத்துடன், அவர்கள் கூறும் 22 பேர் மாத்திரமே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதுடன் வேறு எவரும் போட்டியிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். அஸ்கிரிய மகா நாயக்க தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதனிடையே, பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, முஸ்லிம் அரசியல்வாதிகள் விலகிமை குறித்தும், 83ஆம் ஆண்டு கலவரத்திற்குப் பின்னர் […]
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து செயற்படுவம் என்ற நம்பிக்கை உண்டு
திரும்பவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினருடன் சேர்ந்து இணங்கி போவம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. எனவே இது பற்றி எதுவும் சொல்ல முடியவில்லை. ஆகவே எந்த இடத்திலும் எவரையும் நான் குற்றம் கூறுவதாக இல்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி . விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வென்றில் கலந்துகொண்ட அவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் நீங்கள் சைக்கிள் சின்னத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து செயற்பட தயார் என எழுதிய கடிதத்தை அவர்கள் […]
கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் இந்தியப் பிரதமர் பேச்சு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும், கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார். சற்று முன்னர், இந்தியத் தூதுவரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். இந்தியப் பிரதமருடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும், இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து […]
பாலச்சந்திரன் படத்தோடு தமிழர்கள் தமிழ்நாடும் சிறைக்கூடம்தான் திருமுருகன்!
புழல் மட்டும் சிறை அல்ல, இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு நினைவேந்தல் நடத்த முடியாத, ஒட்டு மொத்த தமிழ்நாடும் சிறைச்சாலை தான் என்று மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் தெரிவித்துள்ளார். முன்னதாக 10ம் ஆண்டு தமிழ்னப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வு சென்னை தமிழர் கடலில் ( மெரினா) அனுமதி மறுக்கப்பட்டதனால் சேப்பாக்கம் மைதானம் அருகில் பேரணியோடு நினைவேந்தல் கூட்டமும் நடைபெற்றது. பாலச்சந்திரன் படம் தாங்கிய ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த கூட்டத்தில் பல்வேறு இயக்கங்கள் கட்சிகளைச் சார்ந்தவர்களும் கலந்திருந்தனர் இங்கு உரையாற்றிய […]
விக்கி, கஜன் முறுகல் வலுக்கிறதா?
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை இணைத் தலைவராகக் கொண்ட தமிழ் மக்கள் பேரவையின் நேற்றைய பொதுக்கூட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புறக்கணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி எனும் பெயரில் புதுக் கட்சி ஒன்றினை ஆரம்பித்திருந்தார். அதனையடுத்து புதிய கூட்டணி ஒன்று அமைப்பது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவந்திருந்தன. சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எவ் அமைப்பினை புதிய அரசியல் கூட்டில் விக்கினேஸ்வரன் இணைத்துக்கொண்டால் தாம் அந்தக் […]
சுவிசில் நடைபெற்ற தியாகதீபம் அன்னைபூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள்.
தேசத்தின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து தன் உயிர்தந்த தியாகதீபம்; அன்னைபூபதி அம்மா அவர்களின் 31ம் ஆண்டு நினைவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட 23வது விளையாட்டுப் போட்டிகளானது 26.05.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வோ மாநிலத்தில் இவர்டோன் நகரில் சிறப்பாக நடைபெற்றது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் விளையாட்டுத்துறையினரால் நடாத்தப்பட்ட போட்டிகளானது பொதுச்சுடரேற்றலுடன், சுவிஸ், தமிழீழத் தேசியக்கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடரேற்றல், அகவணக்கம், மலர்வணக்கத்துடன் ஆரம்பமானது. எதிர்கால சந்ததியினரிடம் தமிழ்த்தேசிய உணர்வை, ஒற்றுமையை பேணிப் பாதுகாக்கவும், தாயகம் நோக்கிய தேடலை […]
சீனா – சுவிஸை தொடர்ந்து பயண எச்சரிக்கையை தளர்த்தியது இந்தியா!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் இலங்கை தொடர்பாக விடுக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கையை இந்தியா தளர்த்தியுள்ளது. புது டில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஊரடங்கு உத்தரவு மற்றும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமை மற்றும் பாடசலைகள் மீண்டும் திறக்கப்பட்டமை ஆகியவற்றால் இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இலங்கைக்கு பயணம் செய்யும் இந்தியர்கள் கவனமாகவும் அவதானத்துடனும் இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. மேலும் இலங்கையில் எந்தவொரு உதவி தேவைப்படினும் […]
தமிழ் மக்களை மிகமோசமாக ஏமாற்றிய அரசாங்கத் தலைவர் மைத்திரி-சிறிதரன்
தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமன்றி, சிங்கள மக்கள் மத்தியிலும் ஒரு ஏமாற்றுக்காரராகத் தன்னைச் சித்தரித்துக் கொண்டுள்ள ஜனாதிபதி சிறிசேனவின் அரசியல் எதிர்காலம் இத்தோடு முடிவடைந்து விட்டது. இனிவரும் காலங்களில் அவரை ஒரு பாராளுமன்ற உறுப்பினராகக் கூட மக்கள் தெரிவு செய்ய மாட்டார்கள்.அத்துடன் இதுவரை காலத்தில் தமிழ் மக்களை மிகமோசமாக ஏமாற்றிய ஓர் அரசாங்கத் தலைவராக மைத்திரிபால சிறிசேன இருக்கிறார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
பயணத் தடையை நீக்குமாறு மேற்கு நாடுகளிடம் சிறிலங்கா அதிபர் கோரிக்கை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர் மோசமடைந்திருந்த பாதுகாப்பு நிலைமைகளில், 99 வீதம் இயல்பு நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனவே, அவசரகாலச்சட்டம் இன்னும் ஒரு மாதத்துக்குள் நீக்கப்படும் என்றும், அவர் கூறியுள்ளார். மேற்குலக நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டார். அவுஸ்ரேலியா, கனடா, ஜப்பான், பிரித்தானியா, ஜேர்மனி,ஈ அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். உடனடி பாதுகாப்பு நிலைமைகளைக் […]











