சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 8 பேர் கைது!

படகொன்றில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கி செல்ல முற்பட்ட 8 பேரை சிலாபம் – முதுபன்திய பிரதேசத்தில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

படகில் இருந்த மேலும் சிலர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படும் போது தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த படகின் உரிமையாளர் புத்தளம் பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட நபர்கள் எந்த பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என இதுவரை கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை உடப்புவ காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்