நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத்தலைவருமான நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைந்ததையடுத்து காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர டிடிவி தினகரன், ஜெ.தீபா, கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத்தலைவருமான விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
மதுசூதனன், மருதுகணேஷ்,டிடிவி தினகரன் போட்டியிடும் நிலையில் ஆர்.கே.நகரில் விஷால் களம் இறங்குவது சினிமாத்துறையிலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.