கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை சந்தித்த சிறீதரன்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனிடம் ஆசீவாதம் பெற்றுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை பதவியினை ஏற்றிருந்த நிலையில் சிவஞானம் சிறிதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தனிடம் (22) கொழும்பில் வைத்து ஆசீவாதம் பெற்றுள்ளார்.

முன்னதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக சிறிதரன் தனது பயணத்தை கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திலிருந்து ஆரம்பித்திருந்தார்.

“ஈழத்தமிழர்களின் அரசியல் உரித்துக்கோரிய பயணத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக எனக்குரித்தாக்கப்பட்ட பொறுப்புகளை உணர்ந்து, கொள்கைரீதியில் ஒருமித்திருப்போரை ஒன்றிணைத்து மேற்கொள்ளவுள்ள பலம் மிக்க பயணத்தை கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திலிருந்து ஆரம்பித்தோம் என சிவஞானம் சிறீதரன் ஊடகங்களிடையே தெரிவித்துள்ளார்.

இதனிடையே சிவஞானம் சிறீதரனுடன் இணைந்து பயணிக்க தயாராக உள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்