எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவினை வழங்குவது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது மற்றும் அரசியல் கூட்டணி அமைப்பது குறித்து மாத இறுதியில் தீர்மானிக்கப்படும் எனவும் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கட்சி பொதுக் கூட்டமொன்றை நடத்தி தீர்க்ககரமான முடிவுகளை எடுக்கவுள்ளதாகவும் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் கொண்டுள்ள திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னர் இது குறித்து தீர்மானிக்கப்படுமென சிவஞானம் சிறீதரன் கூறியுள்ளார்.
அதேNளை தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டால் அவருக்கு ஆதரவளிக்கவும் கட்சி தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஜனாதிபதியாக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட வேண்டுமென குரல்கள் எழுந்துள்ள நிலையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ள கருத்துக்கள் பேசுபொருளாகியுள்ளது.