கூட்டமைப்பின் தேர்தல் பங்கீடு வெளியாகியது!?

உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் தவி­சா­ளர் பதவி பெறும் கூட்­ட­மைப்­பின் தமிழரசுக்கட்சிக்கு அந்­தச் சபை­யில் 60 வீத­மான வேட்­பா­ளர்­களை நிய­மிப்­பது என்­றும் ஏனைய இரு கட்­சி­க­ளும் தலா 20 வீதம் என்ற அடிப்படையிலேயே வேட்பாளர்களை நியமிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தமிழரசுக்கட்சி, ரெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தன.
அதில் 60:40 என்ற இணக்­க­பாடு எட்­டப்­பட்­டிருப்பதாக தெரியவருகிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

தேர்­த­லில் வென்ற பின்­னரே தவி­சா­ள­ரைத் தீர்­மா­னிப்­பது என்­று முடி­வெ­டுக்­கப்­பட்­டது. தவி­சா­ளர் நிறுத்­தப்­ப­டும் கட்சி சார்­பில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெ­றும் வேட்­பா­ளர்­க­ளின் சத­வீ­தம் 60 ஆக இல்­லா­விட்­டால் விகி­தா­சார அடிப்­ப­டை­யில் கிடைக்­கும் நிய­மன ஆச­னங்­களைத் தவி­சா­ளர் தெரி­வா­கும் கட்­சிக்கு வழங்கத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

தவி­சா­ளர் பதவி ஒரு கட்­சிக்கு வழங்­கப்­பட்­டால் மற்­றைய கட்­சிக்கு உப தவி­சா­ளர் பதவி வழங்­கப்­ப­டும். ஒவ்­வொரு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளின் வெற்­றிக்கு மூன்று கட்­சி­க­ளுமே இணைந்து பாடு­ப­டு­வது என்று முடி­வெ­டுக்­கப்­பட்­டது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்